இன்றையதினம் (12) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, தென், வடமேல் மாகாணங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுவதாக, வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி, மாத்தறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 100 மி.மீ. இற்கும் அதிக பலத்த மழை பெய்யக்கூடும்.வட மாகாணத்திலும் அநுராதபுரம் மாவட்டத்திலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும்.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளிலும் வடக்கு, வடமத்திய, வடமேல், தென் மாகாணங்களிலும் திருகோணமலை மாவட்டத்திலும் அவ்வப்போது மணிக்கு 50-60 கி.மீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
சிலாபத்திலிருந்து புத்தளம் மற்றும் மன்னார் ஊடாக காங்கேசந்துறை வரையிலும் காலி முதல் அம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலான மான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகமானது மணித்தியாலத்துக்கு 25-45 கிலோ மீற்றர் வரை காணப்படும் என்பதோடு, அவ்வப்போது அது 60-70 கி.மீ. வரை அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டைச் சூழவுள்ள ஏனைய கடல் பகுதிகளில் காற்றின் வேகம் மணிக்கு 30-40 கி.மீ வரையில் காணப்படும் சாத்தியம் காணப்படுகின்றது.
சிலாபத்திலிருந்து கொழும்பு ஊடாக காலி வரையிலும், காங்கேசந்துறையிலிருந்து முல்லைத்தீவு ஊடாக திருகோணமலை வரையிலுமான கரையோரத்திற்கு அப்பாற்பட்ட கடற்பரப்புகளில் காற்றின் வேகம் மணிக்கு 50-55 கி.மீ வரையில் காணப்படும் சாத்தியம் காணப்படுகின்றது.