இந்திய விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு ஜனாதிபதி அநுரகுமார இரங்கல்

Date:

இந்திய விமான விபத்து குறித்து ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க வருத்தமும், தனது இரங்கலையும் வெளியிட்டுள்ளார்.

இது தொடர்பில் அவர் நேற்றிரவு எக்ஸ் பதிவில் கூறியுள்ளதாவது,

அகமதாபாத் அருகே ஏர் இந்தியா விமானம் AI171 விபத்துக்குள்ளானமை தொடர்பில் நான் மிகவும் வருத்தமடைந்துள்ளேன்.

விமானத்தில் பாதிக்கப்பட்ட அனைவரின் குடும்பங்களுக்கும் எங்கள் இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

இந்த துயரத்தால் உயிர்களையும் எதிர்காலத்தையும் இழந்த இளம் மருத்துவ மாணவர்கள் உட்பட, தரையில் உயிரிழந்த பொதுமக்களின் துயரங்களும் அதே அளவு வேதனையளிக்கின்றன.

இந்த ஆழ்ந்த துக்கத்தின் தருணத்தில், இலங்கை மக்கள் இந்தியாவுடன் ஒற்றுமையுடன் நிற்கிறார்கள்.

பாதிக்கப்பட்ட அனைவருடனும் எங்கள் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உள்ளன – என்று பதிவிட்டுள்ளார்.

Popular

More like this
Related

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு காலம் நீடிப்பு!

அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்புக்காக வழங்கப்பட்டிருந்த கால அவகாசம் மேலும் நீடிக்கப்பட்டுள்ளதாக...

சிலாபம் வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவு நாளை திறக்கப்படும்

சிலாபம் மாவட்ட பொது வைத்தியசாலையின் வெளிநோயாளர் பிரிவை (OPD) நாளை (03)...

உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026 ஜனவரி தொடக்கத்தில் நடைபெறும்

கல்வி பொது தராதர பத்திர உயர்தர பரீட்சையின் மீதமுள்ள பாடங்கள் 2026...

சி.பி. ரத்நாயக்க இலஞ்சம் ஒழிப்பு ஆணைக்குழுவால் கைது

முன்னாள் அமைச்சர் சி.பி.ரத்னாயக்க இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவினால் கைதுசெய்யப்பட்டுள்ளார். ஆணைக்குழு...