உறவுகளை பலப்படுத்தும் நோக்கில் ஜேவிபிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையில் சந்திப்பு

Date:

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அழைப்பின் பேரில் தற்போது சீனா சென்றுள்ள மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா உட்பட்ட ஜேவிபியின் பிரதிநிதிக்குழு சீன கம்யூனிஸ்ட் கட்சியினரை சந்தித்து கலந்துரையாடல்களை நடத்தியுள்ளனர்.

சீன கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் ஸிஜியாங் (Zhejiang) மாகாண ஆளுநர் லியு ஜியோ (Liu Jie) கலந்துகொண்டார்.

இச்சந்திப்பின் போது மக்கள் விடுதலை முன்னணிக்கும் சீன கம்யூனிஸ்ட் கட்சிக்கும் இடையிலான நீண்டகால நட்புறவு குறித்து கலந்துரையாடப்பட்டுள்ளது.

இலங்கையிலிருந்து சென்ற குழுவில் பிரதி அமைச்சர்களான எரங்க குணசேகர, முனீர் முழப்பர், பாராளுமன்ற உறுப்பினர்களான எம். ஜெகதீஸ்வரன், தீப்தி வாசலகே, தர்மப்பிரிய விஜேசிங்க ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.

Popular

More like this
Related

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாகின்றன!

நாட்டில் ஒவ்வொரு நாளும் சுமார் 8 தற்கொலை சம்பவங்கள் பதிவாவதாக தேசிய...

நாட்டின் சில பிரதேசங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்!

இன்றையதினம் (07) நாட்டின் மேல், சப்ரகமுவ மாகாணங்களிலும் நுவரெலியா, கண்டி, காலி,...

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...