பலஸ்தீன சுதந்திரத்திற்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி

Date:

பலஸ்தீனத்தின் சுதந்திரத்துக்காக இன்று (30) கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

பலஸ்தீன ஒருமைப்பாட்டு மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம், கொழும்பு கொம்பனித்தெருவில் ஆரம்பித்து, அமெரிக்க தூதரகம் வரை பேரணியாக சென்று, அங்கு எதிர்ப்பு முழக்கங்களுடன் தொடரப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அரசியல் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

“பலஸ்தீனத்திற்கு சுதந்திரம்”, “தனி நாடு உருவாக்கப்பட வேண்டும்”, “இஸ்ரேல் மேற்கொண்ட யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

பலஸ்தீன மக்களின் நலன் மற்றும் நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும் என வலியுறுத்தும் இந்தப் பேரணியில், கலவரமின்றி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...