கெரண்டிஎல்ல பஸ் விபத்தின் விசாரணை அறிக்கை பாதுகாப்பு அமைச்சரிடம் கையளிப்பு

Date:

கொத்மலை, ரம்பொடை – கெரண்டிஎல்ல பகுதியில் இடம்பெற்ற பஸ் விபத்து தொடர்பில் நியமிக்கப்பட்ட குழுவின் அறிக்கை பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹணவினால் குழுவின் அறிக்கை அமைச்சரிடம் நேற்று புதன்கிழமை (11)  கையளிக்கப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கதிர்காமத்திலிருந்து குருநாகல் நோக்கிச் சென்ற இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து, கடந்த 11ஆம் திகதி அதிகாலை 4.45மணியளவில் நுவரெலியா-கண்டி வீதியில் உள்ள கெரண்டிஎல்ல பகுதியில் பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இதன்படி, பஸ் சாரதிக்கு ஏற்பட்ட சோர்வு, நித்திரை கலக்கம் மற்றும் ஓய்வின்மை ஆகிய காரணங்களினாலேயே விபத்து நேர்ந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்துரைத்த குறித்த விசாரணைக்குழுவின் பிரதானி சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண,

குறித்த பஸ்ஸின் சாரதி மற்றும் நடத்துநர் உட்பட, 84 பேர் பயணித்தனர் என  குறிப்பிட்டுள்ளார்.

சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதனை அடுத்து அருகிலுள்ள குழியொன்றில் விழுந்து பஸ் கட்டுப்பாட்டை இழந்துள்ளது. இதனையடுத்தே விபத்து நேர்ந்துள்ளது.

எவ்வாறாயினும் விபத்தில் மரணித்த மேற்படி சாரதியின் மீது முழுப் பொறுப்பையும் சுமத்த முடியாது என சிரேஷ்ட பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.

இந்த விபத்தில் 23 பேர் உயிரிழந்ததோடு, 60 பேர் காயமடைந்தமை குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

இந்திய பொருளாதாரம், கல்வி, கலாச்சார அனுபவங்களை பகிர்ந்த இலங்கை இளம் அரசியல் தலைவர்கள்!

இந்திய அரசு, இந்திய வெளிவிவகார அமைச்சு மற்றும் இந்திய கலாச்சார உறவுகளுக்கான...

ஜனாதிபதி தலைமையில் உலக ஆதிவாசிகள் தின தேசிய கொண்டாட்டம்

உலக ஆதிவாசிகள் தினத்தை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேசிய வைபவம் ஜனாதிபதி...

காசாவைக் கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் குறித்து இலங்கை ஆழ்ந்த கவலை!

காசா நகரத்தின் கட்டுப்பாட்டைக் கைப்பற்ற இஸ்ரேல் எடுத்த முடிவு குறித்து இலங்கை...

முன்னாள் முதலமைச்சருக்கு ரூ.77 இலட்சத்திற்கும் அதிக மேலதிக எரிபொருள்:கோபா குழுவில் அம்பலமான தகவல்

2014-2017 காலப்பகுதியில் சப்ரகமுவ மாகாண சபையின் முன்னாள் முதலமைச்சருக்கு அனுமதிக்கப்பட்ட எரிபொருள்...