பேருவளை நகர சபையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தம்

Date:

இன்று ஆரம்பிக்கப்படவிருந்த பேருவளை நகர சபையின் நடவடிக்கைகள் தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டுள்ளதாக, பேருவளை நகர சபையின் ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் குழு தெரிவித்துள்ளது.

இன்று சபையை நடவடிக்கைகள் ஆரம்பமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தாலும், பேருவளை நகர சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட 6 உறுப்பினர்களில் 4 பேருக்கு குறித்த கடிதம் கிடைக்கவில்லை என்பதால், ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தனர்.

அதன்படி, அந்தக் கடிதங்களை முறையாக வழங்கிய பிறகு, நகர சபை நடவடிக்கைகளை ஆரம்பிக்க வேண்டும் என்று மேன்முறையீட்டு நீதிமன்றம் அறிவித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியில் இருந்து பேருவளை நகரசபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் இந்த விடயம் குறித்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...