அக்குரணை பிரதேச சபை ஐக்கிய மக்கள் சக்தியிடம்: தலைவராக இஸ்திஹார்!

Date:

அக்குரணை பிரதேச சபையில் பெரும்பான்மை வாக்குகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி அதிகாரத்தைக் தக்கவைத்துள்ளது.

அதன்படி அக்குரணை பிரதேச சபையின் தலைவராக இஸ்திஹார் இமாதுதீன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று (12) காலை நடைபெற்ற குறித்த வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் இஸ்திஹார் இமாதுதீன் மேலதிக 3 வாக்குகளைப் பெற்று தலைவர் பதவிக்குத் தெரிவாகியுள்ளதாக மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சமிலா அத்தபத்து அறிவித்தார்.

அக்குரணை பிரதேச சபையில் உள்ள 30 உறுப்பினர்களில் ஒருவர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை,  29 உறுப்பினர்கள் வாக்களித்தனர். தலைவர் பதவிக்காக தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தாரிக் அலி போட்டியிட்டு 13 வாக்குகளை பெற்றார்.

உப தலைவர் பதவிக்கு பொதுஜன ஐக்கிய முன்னணியின் சமிந்த திலகரத்ன 18 வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேசிய மக்கள் சக்தியின் வசந்த குமார 11 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

Popular

More like this
Related

மாகாண சபை தேர்தல் அடுத்த ஆண்டில்!

மாகாண சபைத் தேர்தல்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் என்று வெளிவிவகார அமைச்சர்...

ஆப்கானிஸ்தான் விமானத் தளத்தை கைப்பற்ற முயற்சி: பாகிஸ்தான் உள்ளிட்ட கூட்டமைப்பு நாடுகள் எதிர்ப்பு

ஆப்கானிஸ்தான் விமானத் தளத்தை அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் டிரம்ப் கைப்பற்றக் கோரும்...

2026 தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான வகுப்புக்களை ஆரம்பிப்பது தொடர்பாக கல்வி அமைச்சு சுற்றிக்கை

2026 ஆம் ஆண்டில் தரம் ஒன்றிற்கு அனுமதிக்கப்படும் மாணவர்களுக்கான முறைப்படி வகுப்புக்களை...

‘ஈஸ்டர் தாக்குதலுக்குப் பின்னால் இந்தியா இருப்பதாகக் கூறும் செய்தி உண்மைக்குப் புறம்பானது’: பொலிஸ் ஊடகப் பிரிவு விளக்கம்.

ஈஸ்டர் தாக்குதலுக்கு முக்கியமாக செயல்பட்டவர் அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், இந்தியா இதற்குப் பின்னால்...