அக்குரணை பிரதேச சபை ஐக்கிய மக்கள் சக்தியிடம்: தலைவராக இஸ்திஹார்!

Date:

அக்குரணை பிரதேச சபையில் பெரும்பான்மை வாக்குகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி அதிகாரத்தைக் தக்கவைத்துள்ளது.

அதன்படி அக்குரணை பிரதேச சபையின் தலைவராக இஸ்திஹார் இமாதுதீன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று (12) காலை நடைபெற்ற குறித்த வாக்கெடுப்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் இஸ்திஹார் இமாதுதீன் மேலதிக 3 வாக்குகளைப் பெற்று தலைவர் பதவிக்குத் தெரிவாகியுள்ளதாக மத்திய மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சமிலா அத்தபத்து அறிவித்தார்.

அக்குரணை பிரதேச சபையில் உள்ள 30 உறுப்பினர்களில் ஒருவர் வாக்களிப்பில் பங்கேற்கவில்லை,  29 உறுப்பினர்கள் வாக்களித்தனர். தலைவர் பதவிக்காக தேசிய மக்கள் சக்தியின் சார்பில் தாரிக் அலி போட்டியிட்டு 13 வாக்குகளை பெற்றார்.

உப தலைவர் பதவிக்கு பொதுஜன ஐக்கிய முன்னணியின் சமிந்த திலகரத்ன 18 வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

தேசிய மக்கள் சக்தியின் வசந்த குமார 11 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

Popular

More like this
Related

நாமல் உலமா சபைக்கு விஜயம்: ஜனாஸா எரிப்பு உள்ளிட்ட முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளை சுட்டிக் காட்டிய ACJU

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களான  நாமல் ராஜபக்ச,...

நவீன சவால்களுக்கு மத்தியில் இளைஞர்கள்: ஓர் இஸ்லாமிய கண்ணோட்டம்!

-(மௌலவி M.I. அன்வர் (ஸலபி)  (நன்றி: நவயுகம் இணையத்தளம்) ஆகஸ்ட் 12 ஆம் திகதி...

பிரியந்த வீரசூரியவை பொலிஸ் மா அதிபராக நியமிக்க அரசியலமைப்பு பேரவை அங்கீகாரம்!

நாட்டின் 37ஆவது பொலிஸ்மா அதிபராக பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த...