இஸ்ரேலில் வேலை வாய்ப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் வேலை தேடும் இலங்கையர்களுக்கும் சிவப்பு அறிவிப்பு

Date:

இஸ்ரேலுக்கும் ஈரானுக்கும் இடையிலான மோதல் நிலைமை காரணமாக இஸ்ரேலின் சர்வதேச விமான நிலையங்கள் செயற்பாட்டு மட்டத்தில் இல்லை என இஸ்ரேலின் மக்கள் தொகை மற்றும் குடிவரவு அதிகார சபை (PIBA) தெரிவித்துள்ளது.

இஸ்ரேலில் வேலை வாய்ப்புகளுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து வேலை தேடும் இலங்கையர்களும், தற்போது நிலவும் சூழ்நிலை காரணமாக, இஸ்ரேலில் வேலை வாய்ப்புகளுக்காக அனுப்பப்படுதல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக இலங்கை வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இந்த அறிவித்தல் இஸ்ரேலில் பணிபுரிந்து, மீண்டும் வேலைக்கு இஸ்ரேலுக்குச் செல்லும் எதிர்பார்ப்புடன் இலங்கைக்குத் திரும்பிய இலங்கையர்களுக்கும் பொருந்தும்.

1985 ஆம் ஆண்டின் 21 ஆம் இலக்க இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகச் (SLBFE) சட்டத்தின் பிரிவு 39 (1) (b) இன் படி,  மறு – அறிவிப்பு வரும் வரை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் வேலைவாய்ப்புக்கள் தொடர்பில் பதிவுகள் எதுவும் மேற்கொள்ளப்படமாட்டாது.

அத்துடன், எதிர்காலத்தில் இஸ்ரேலில் வேலைவாய்ப்புகளுக்கான வழிகாட்டல்கள் இஸ்ரேலின் மக்கள் தொகை மற்றும் குடிவரவு அதிகாரசபையின் (PIBA) அறிவிப்பின் பேரில் மேற்கொள்ளப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...