இந்தோனேசியாவில் அவசரமாக தரையிறங்கிய ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்!

Date:

நேற்று (05) மாலை கட்டுநாயக்காவிலிருந்து சிங்கப்பூருக்குப் புறப்பட்ட UL 306 ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம், இந்தோனேசியாவின் மேடானில் உள்ள கோலா நாமு சர்வதேச விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.

விமானத்தின் தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இந்த சம்பவம் நிகழ்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

இந்தோனேசிய தொழில்நுட்பக் குழு விமானத்தை ஆய்வு செய்து, பழுதுபார்ப்பதற்கு கூடுதல் நேரம் தேவைப்படும் என்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸிடம் தெரிவித்துள்ளது.

ஜூன் 6 ஆம் திகதி அதிகாலையில் ஜகார்த்தாவிலிருந்து புறப்பட்ட இலங்கை தொழில்நுட்பக் குழு, விமானத்தை மதிப்பீடு செய்து பழுதுபார்க்க மேடானுக்கு வந்தது.

 

சிக்கித் தவிக்கும் பயணிகளை அவர்களின் இலக்குக்கு அழைத்துச் செல்ல, ஜூன் 6 ஆம் திகதி உள்ளூர் நேரப்படி பிற்பகல் 1:45 மணிக்கு புறப்படுவதற்கு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் தனி விமானத்தைத் திட்டமிட்டது.

 

எவ்வாறெனினும், சிக்கித் தவிக்கும் பயணிகள் விமான நிலையத்தில் நீண்ட காத்திருப்பு காலம், போதுமான வசதிகள் மற்றும் தெளிவான தகவல் தொடர்பு இல்லாமை குறித்து முறைப்பாடு தெரிவித்துள்ளனர்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...