ட்ரம்பின் நடவடிக்கைக்கு எதிராக மாபெரும் மக்கள் போராட்டம்: கலவரத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை

Date:

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியேற்ற சட்ட நடைமுறைக்கு எதிராக அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தொடரும் மூன்றாவது நாள் போராட்டங்களை அடக்குவதற்கு உதவும் வகையில், லாஸ் ஏஞ்சல்ஸின் வீதிகளில் கலிபோர்னியா பாதுகாப்பு

படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நடவடிக்கையை, அந்த மாநில ஆளுநர் கெவின் நிவ்சம் சட்டவிரோதமானது என கண்டித்துள்ளார். மேலும், போராட்டக்காரர்களை பொலிஸார் கைதுசெய்து வருகின்றனர்.
அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றியும் சட்டவிரோதமாகவும் குடியேறியவர்களை கண்டறிந்து நாடு கடத்தும் தீர்மானத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள சோதனை மற்றும் கைது நடவடிக்கைகளுக்கு எதிராக தற்போது அந் நாட்டில் போராட்டங்களில் வெடித்துள்ளன.
லொஸ் ஏஞ்ஜல்ஸ் மக்கள் தொகையில் கணிசமானோர் ஹிஸ்பானிக் மற்றும் வெளிநாடுகளில் பிறந்தவர்கள் என மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான பின்னணியிலேயே அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றியும், சட்டவிரோதமாகவும் குடியேறியவர்களை கண்டறிந்து நாடு கடத்தும் ட்ரம்பின் தீர்மானத்திற்கமைவாக கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்காக தேசிய பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள்  சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவர்கள் எனவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு படையினரை மீள அழைக்குமாறு கலிபோர்னிய ஆளுநர் கெவின் நிவ்சம் ஜனாதிபதி ட்ரம்பை வலியுறுத்தியுள்ளார்.

ட்ரம்ப் தலையீடு செய்யும் வரை, தமது பிராந்தியத்தில் பிரச்சினை இருக்கவில்லையென அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கை இறையாண்மை மீதான பாரிய மீறல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆர்ப்பாட்டக்காரர்களிடம் அமைதியாக செயற்படுமாறும் கலிபோர்னிய ஆளுநர் கெவின் நிவ்சம் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Popular

More like this
Related

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (09) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி தொடர்பான படங்கள்!

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த 'பிரபஞ்சத்துக்கு அருளான முஹம்மது நபி ஸல்லல்லாஹு...

165,512 வாகன இலக்கத் தகடுகள் இன்னும் நிலுவையில்!

புதிய வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்தை போக்குவரத்து,...

நவம்பர் 30ஆம் திகதி முதல் பஸ்களில் வங்கி அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்த வாய்ப்பு.

டிக்கெட் இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் பஸ்களில், பயணிகள் வங்கி அட்டைகளைப்...