தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகர சபை உறுப்பினராகிறார் சமூக நீதிக் கட்சியின் தலைவர் அர்க்கம் முனீர்!

Date:

முடிந்த உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் சமூக நீதிக் கட்சி, தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகர சபைக்கு இறகுச் சின்னத்தில் சுயேட்சையாக போட்டியிட்டு ஒரு ஆசனத்தை வெற்றி கொண்டது.

இந்த ஆசனத்திற்கு கட்சியின் தலைவர் அர்க்கம் முனீர் கட்சியினால் ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டுள்ளார்.

இந்தத் தேர்தலில் தெஹிவளை, கல்கிஸ்ஸை மற்றும் ரத்மலான பிரதேச மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை முன்னிறுத்தி தேர்தல் விஞ்ஞாபனத்தை வெளியிட்ட ஒரே அணி இறகுகள் அணி என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தின் செயற்திட்டத்தினை அடிப்படையாக வைத்து மாநகர சபை அமர்வுகளில் சமூக நீதிக் கட்சி பல முன்மொழிவுகளை முன்வைக்கத் திட்டமிட்டுள்ளது.

இதேவேளை தேர்தல் பிரச்சாரங்களிலும், விஞ்ஞாபனத்துக்கான கொள்கை வகுப்பதிலும் முன் நின்று செயற்பட்ட சட்டத்தரணி இல்ஹாம் ஹஸனலி இறுதி இரண்டு வருடங்களும் தெஹிவளை கல்கிஸ்ஸை மாநகர சபையை அலங்கரிப்பார் என்று கட்சி ஏகமனதாகத் தீர்மானித்துள்ளது.

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகலில் மழை

மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும்...

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...