இந்தியாவின் மிகப்பெரிய வானூர்தி விபத்து, குடியிருப்புப் பகுதியில் விழுந்ததால் இன்னும் உயிரிழப்புகள் அதிகமாகக் கூடும் என்கிறார்கள்.
இந்நிலையில் விபத்து தொடர்பில் பலர் பல்வேறு கருத்துக்களையும் பகிர்ந்து வருகின்றார்கள். அந்தவகையில் முகப்புத்தகத்தில் கை.அறிவழகன் என்பவர் பதிவிட்டுள்ள கருத்துக்கள்…
மிகப்பெரிய துயரம், மனம் கனத்துப் போயிருக்கிறது, தொடர்ந்து பல்வேறு தொலைக்காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன்.
இருக்கை எண் 11A இல் பயணித்த உயிர்பிழைத்த ஒருவர் குறைந்த அளவுக் காயங்களோடு நடந்து போவதை வீடியோ மூலம் காட்டப்படுகின்றது.
தேசபக்தரும், இந்திய இராணுவ ஆய்வாளருமான அர்னாப் கோஸ்வாமியின் Republic TV இல் விபத்து தொடர்பான விவாதம் நடக்கிறது.
அர்னாப் சொல்கிறார், “Air India வானூர்திகளை Maintain செய்வது ஒரு இஸ்லாமிய நாடான துருக்கியைச் சேர்ந்த நிறுவனம், இந்தியாவின் எதிரி நாடும், பாகிஸ்தானின் நட்பு நாடுமான துருக்கிய நிறுவனத்தில் Turkish Technique பயன்படுத்தி Maintain செய்யப்படுவதால் தான் இந்த விபத்து நடந்திருக்கிறதா?”
ஒரு விபத்தை எப்படி மதச்சார்பாக மாற்றி தேசபக்த நாடகம் நடத்தலாம், அதன் வழியாக TRP யை ஏற்றிக் கொள்ளலாம், இந்துத்துவப் பரிவாரங்களின் கரத்தை வலிமை செய்யலாம் என்று யோசிக்கிறார் அர்னாப்.
உலகின் மிகக் கொடூரமான, குரூரமான சிந்தனை கொண்டவர்கள் இந்திய வலதுசாரிகள் என்பதற்கு இது ஒரு சோற்றுப் பதம். பாகிஸ்தானும், துருக்கியும் இணைந்து இதைத் திட்டமிட்டு நடத்தி இருக்கிறார்கள் என்றும், ஆகவே பீகார் மக்களே நீங்கள் பாரதீய ஜனதாவுக்கு வாக்களிக்க வேண்டும் என்று மோடி பேசுவதற்கான எல்லா சாத்தியக் கூறுகளும் இருக்கிறது.
பேய்களின் ஆட்சியில் பிணந்தின்னும் சாத்திரங்கள்…
விபத்தில் இறந்தவர்களுக்கு ஆழ்ந்த அஞ்சலி, அவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல். காயமடைந்தவர்கள் விரைந்து நலம் பெறட்டும். வணிகத்தைத் தாண்டி வானூர்தி நிறுவனங்கள் மனித உயிர்களின் மதிப்பை உணர்ந்து செயல்பட வேண்டும்.
-கை.அறிவழகன்