ஈரான்-இஸ்ரேல் மோதல் குறித்த குழு விவாதம் கொழும்பில்

Date:

ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான சமீபத்திய மோதல் மற்றும் அதன் புவிசார் அரசியல் மற்றும் பிராந்திய தாக்கங்களை ஆராய்வதற்காக சிறப்பு குழு விவாதம் ஒன்று எதிர்வரும் ஜூன் 26, வியாழக்கிழமை மாலை 4.30 மணி முதல் கொழும்பு 10 விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெறும்.

இந்த குழு விவாதத்தில் சண்டே டைம்ஸ் பத்திரிகையின் துணை ஆசிரியர் சிரேஷ்ட ஊடகவியலாளர் அமீன் இஸ்ஸதீன், ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் ஆய்வுகள் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க மற்றும் அரசியல் ஆய்வாளர் டாக்டர் ரவூப் ஸெய்ன் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.

இந்த விவாதம், ஈரான்-இஸ்ரேல் மோதலின் தாக்கங்கள், நடுநிலை நாடுகளின் பங்கு, பாதுகாப்பு சவால்கள் மற்றும் எதிர்கால நிலைமைகள் பற்றி ஆழமான பார்வையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...