இஸ்ரேலிய அமைச்சர்களுக்கு இங்கிலாந்து தடை: இடாமர் பென்-க்விர் மற்றும் பெசலெல் ஸ்மோட்ரிச் இருவரினதும் சொத்துக்கள் முடக்கப்படுவதுடன் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

Date:

இஸ்ரேலிய இரு அமைச்சர்களின் சகல விதமான வங்கிக் கணக்குகளையும் முற்றுமுழுதாக முடக்குவதற்கு இங்கிலாந்து தீர்மானத்துள்ளது.

கனடா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட இன்னும் பல நாடுகள் மேற்கொண்ட தீர்மானத்துக்கு ஏற்ப இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய பலஸ்தீன மனித உரிமைகளை கடுமையாக துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் தீவிரவாத வன்முறையைத் தூண்டியமை ஆகிய குற்றங்களுக்காக இஸ்ரேலின் இரண்டு வலதுசாரி அமைச்சர்களான, தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர் மற்றும் நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் ஆகியோர் மீது இங்கிலாந்து (UK) தடை விதித்துள்ளது.

ஏற்கனவே இந்த இருவர் மீதும் கனடா,ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பிற நாடுகள் இதேபோன்ற தடைகளை விதித்துள்ளதை தொடர்ந்து, மேற்படி இருவரினதும் சொத்துக்கள் முடக்கப்படுவதுடன் அந்நாடுகள் மீது  பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார், இந்த நடவடிக்கை “அருவருப்பானது” என்றும், “ஏற்றுக்கொள்ள முடியாத முடிவுக்கு” எவ்வாறு பதிலளிப்பது என்பதை முடிவு செய்ய அரசாங்கம் அடுத்த வார தொடக்கத்தில் ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்தும் என்றும் கூறினார்.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...