இஸ்ரேலிய அமைச்சர்களுக்கு இங்கிலாந்து தடை: இடாமர் பென்-க்விர் மற்றும் பெசலெல் ஸ்மோட்ரிச் இருவரினதும் சொத்துக்கள் முடக்கப்படுவதுடன் பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளது.

Date:

இஸ்ரேலிய இரு அமைச்சர்களின் சகல விதமான வங்கிக் கணக்குகளையும் முற்றுமுழுதாக முடக்குவதற்கு இங்கிலாந்து தீர்மானத்துள்ளது.

கனடா, அவுஸ்திரேலியா, நியூஸிலாந்து உள்ளிட்ட இன்னும் பல நாடுகள் மேற்கொண்ட தீர்மானத்துக்கு ஏற்ப இந்த முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய பலஸ்தீன மனித உரிமைகளை கடுமையாக துஷ்பிரயோகம் செய்தமை மற்றும் தீவிரவாத வன்முறையைத் தூண்டியமை ஆகிய குற்றங்களுக்காக இஸ்ரேலின் இரண்டு வலதுசாரி அமைச்சர்களான, தேசிய பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர் மற்றும் நிதி அமைச்சர் பெசலெல் ஸ்மோட்ரிச் ஆகியோர் மீது இங்கிலாந்து (UK) தடை விதித்துள்ளது.

ஏற்கனவே இந்த இருவர் மீதும் கனடா,ஆஸ்திரேலியா, நியூசிலாந்து மற்றும் பிற நாடுகள் இதேபோன்ற தடைகளை விதித்துள்ளதை தொடர்ந்து, மேற்படி இருவரினதும் சொத்துக்கள் முடக்கப்படுவதுடன் அந்நாடுகள் மீது  பயணத்தடையும் விதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சர் கிடியோன் சார், இந்த நடவடிக்கை “அருவருப்பானது” என்றும், “ஏற்றுக்கொள்ள முடியாத முடிவுக்கு” எவ்வாறு பதிலளிப்பது என்பதை முடிவு செய்ய அரசாங்கம் அடுத்த வார தொடக்கத்தில் ஒரு சிறப்புக் கூட்டத்தை நடத்தும் என்றும் கூறினார்.

Popular

More like this
Related

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த ‘நபிகள் நாயகம்’ பற்றிய கண்காட்சி தொடர்பான படங்கள்!

திஹாரிய தன்வீர் அகடமி ஏற்பாடு செய்த 'பிரபஞ்சத்துக்கு அருளான முஹம்மது நபி ஸல்லல்லாஹு...

165,512 வாகன இலக்கத் தகடுகள் இன்னும் நிலுவையில்!

புதிய வாகன இலக்கத் தகடுகளை வழங்கும் பணியில் ஏற்பட்டுள்ள தாமதத்தை போக்குவரத்து,...

நவம்பர் 30ஆம் திகதி முதல் பஸ்களில் வங்கி அட்டைகள் மூலம் கட்டணம் செலுத்த வாய்ப்பு.

டிக்கெட் இயந்திரங்கள் மூலம் பயணச்சீட்டுக்கள் வழங்கப்படும் பஸ்களில், பயணிகள் வங்கி அட்டைகளைப்...

30ஆவது வருட நிறைவையிட்டு கொழும்பு பங்குச் சந்தையில் மணியோசை எழுப்பிய CDB

நிதியியல் விசேடத்துவம் மற்றும் புத்தாக்கத்தில் தனது வலுவான இடத்தை வலியுறுத்தியபடி, இலங்கையின்...