CID பணிப்பாளராக ஷானி அபேசேகர மீண்டும் நியமனம்

Date:

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) பணிப்பாளராக சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் (SSP) ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

தேசிய பொலிஸ் ஆணைக்குழுவின் அனுமதியுடன் இந்த மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது.

குறித்த பதவியில் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் இமேஷா முத்துமால பதவி வகித்திருந்த நிலையில் இப்பதவிக்கு ஷானி அபேசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.

CID யின் பணிப்பாளராக இதற்கு முன்னரும் இப்பதவியில் இருந்த அவர், அரசியல் ரீதியாக பணியாற்றுவதாக 2019 தேர்தலைத் தொடர்ந்து கோட்டாபய ராஜபக்‌ஷ ஆட்சிக் காலத்தில் இடமாற்றம் செய்யப்பட்டதோடு, வழக்குகளை போலியாக ஜோடிப்பதாக தெரிவித்து 2020 ஜனவரி மாதம் கைது செய்யப்பட்டிருந்தார்.

பின்னர் பொலிஸ் சேவையிலிருந்து இடைநிறுத்தப்பட்ட அவர, 2021 இல் ஜூன் மாதம் பிணையில் விடுவிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து அவர் பொலிஸ் சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் உள்ளிட்ட பல்வேறு விசாரணைகளை முன்னெடுத்த திறமை மிக்க அதிகாரிகளில் ஒருவரான ஷானி அபேசேகர, தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததைத் தொடர்ந்து ஒப்பந்த அடிப்படையில் மீண்டும் பதவியில் இணைக்கப்பட்டிருந்தார்.

புதிதாக உருவாக்கப்பட்ட குற்றவியல் புலனாய்வு பகுப்பாய்வு மற்றும் தடுப்புப் பிரிவின் (Criminal Intelligence Analysis and Prevention Division) பணிப்பாளராக அவர் பதவிக்கு அமர்த்தப்பட்டிருந்தார்.

இந்நிலையில் தற்போது CID பிரதானியாக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

Popular

More like this
Related

வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய பகுதிகளில் பல தடவை மழை!

இன்றையதினம் (05) நாட்டின் வடக்கு, கிழக்கு, ஊவா, வடமத்திய, மத்திய மாகாணங்களிலும்...

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...