சிவஶ்ரீ சுந்தரராம குருக்களுக்கு கனடாவில் கௌரவம்…!

Date:

மதிப்பிற்குரிய சிவஶ்ரீ சுந்தரராமக்குருக்கள் அவர்களுக்கு, அவரது தெய்வீக கிரியைகள் மற்றும் சமூகத்திற்கான அற்புத சேவையை பாராட்டி, “கவிச்செம்மல் கிரியாதிலகம்” எனும் கௌரவ பட்டம் வழங்கி பெருமையுடன் கௌரவிக்கப்பட்டார்.

கடந்த ஜூன் 19 ஆம் திகதி, கனடா  மிசிசாகாவில் அமைந்துள்ள ஶ்ரீ ஹரிகரசுதன் ஐயப்பன் ஆலயத்தில், ஆலய அவையோர் மற்றும் பெருந்திரளான பக்தர்கள் முன்னிலையில் இந்த சிறப்புவிழா விமர்சையாக நடைபெற்றது.

விழாவில், சிவஶ்ரீ சுந்தரராமக்குருக்கள் ஐயாவுக்கு பொன்னாடை போர்த்தி கௌரவிக்கப்பட்டார்.

இந்த நிகழ்வில் ஆலய நிர்வாகிகள், தமிழ் சமூக தலைவர்கள் மற்றும் பண்பாட்டு அமைப்பினர் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் தெரிவித்ததோடு, அவரது அர்ப்பணிப்பு, பக்தி மற்றும் சமுதாய முன்னேற்றத்திற்கு இட்டுச் செல்லும் கிரியைகளை நினைவுபடுத்தும் விதமாக வழங்கப்பட்டது.

சிவஶ்ரீ சுந்தரராமக்குருக்கள் ஐயா அவர்கள் புத்தளம் மாவட்ட சர்வமத அமைப்பின் இணைத்தலைவர்களுள் ஒருவராகவும், அனைத்து மதங்களிடையிலான ஒற்றுமை, சகவாழ்வு மற்றும் பண்பாட்டு ஒருங்கிணைப்புக்காக சிறப்பாக பணியாற்றியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

Popular

More like this
Related

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக இலங்கை பொருளாதாரத்தில் ஏற்படக்கூடிய தாக்கம் குறித்து கலந்துரையாடல்

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய போர்ச் சூழல் காரணமாக இலங்கையின் பொருளாதாரத்தில்...

புத்தளம் ஆதார வைத்தியசாலை மத்திய அரசாங்கத்தின் கீழ்:

தற்போது வடமேல் மாகாண சபையின் கீழ் இயங்கி வரும் புத்தளம் ஆதார...

ஐக்கிய அரபு அமீரக ஜனாதிபதியுடன் ஜனாதிபதி அநுர பேச்சு!

ஐக்கிய அரபு அமீரகம் அண்மையில் எதிர்கொண்ட தாக்குதல்கள் குறித்துத் தனது கவலையைத்...

இலங்கை கடற்பரப்பில் ஈரானிய கப்பல் மீதான தாக்குதலில் 100-க்கும் மேற்பட்டோர் மாயம்: ரெய்ட்டர்ஸ் தகவல்

இலங்கை கடற்கரையில் ஈரானிய கப்பலின் மீது சந்தேகத்திற்கிடமான நீர்மூழ்கிக் கப்பல் நடத்திய...