பொசன் தினத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 19,000 தன்சல்கள் பதிவு

Date:

பொசன் தினத்தை முன்னிட்டு நாடளாவிய ரீதியில் 19,185 தானசாலைகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக சுகாதார மற்றும் வெகுஜன ஊடக அமைச்சின் மேலதிக செயலாளர் ஆலோசகர் வைத்தியர் லக்ஷ்மி சோமதுங்க தெரிவித்தார்.

இந்த தானசாலைகளின் பொது சுகாதாரத் தரங்களைக் கண்காணிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

 

பொசன் தினத்தை முன்னிட்டு பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு இலவச உணவு மற்றும் பானங்களை  தானசாலைகள ஊடாக வழங்குவது  இலங்கையில் மிகவும் மதிப்புமிக்க ஒரு பாரம்பரியமாகும் என வைத்தியர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

 

கொழும்பு – 944, கம்பஹா – 1,792, களுத்துறை – 977, கண்டி – 1,264, மாத்தளை – 812, நுவரெலியா – 352, காலி – 1,186,மாத்தறை – 1,021, அம்பாந்தோட்டை – 533, இரத்னபுரி – 1,097, கேகாலை – 922 ஆகிய இடங்களில் உணவு பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கழிவு முகாமைத்துவம் ஆகியவற்றில் விசேட  கவனம் செலுத்தப்படும் எனவும், அனைவருக்கும் பாதுகாப்பான மற்றும் அர்த்தமுள்ள பொசன்  கொண்டாட்டத்தை உறுதி செய்வதாகவும் வைத்தியர் லக்ஷ்மி சோமதுங்க மேலும் தெரிவித்துள்ளார்.

Popular

More like this
Related

பாகிஸ்தானை ஜனநாயக இஸ்லாமிய நலன்புரி நாடாக மாற்றுதல் என்ற தொனிப்பொருளில் கொழும்பில் நடைபெற்ற பாகிஸ்தானின் சுதந்திர தின நிகழ்வு

பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் சமூகத்தினருடன் இணைந்து பாகிஸ்தானை வலுவான,...

கல்வியில் எதிர்பார்க்கப்படும் இலக்குகளை அடைந்துகொள்வதற்கான தன்னார்வ ஆலோசனை சபை நியமனம்: துறைசார்ந்த முஸ்லிம்கள் எவரும் இல்லை!

கல்வித் துறையில் தரமான வளர்ச்சியை ஏற்படுத்தும் நோக்கிலான புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுக்கு...

‘செம்மணி’ நூல் வெளியீடும் கலந்துரையாடலும் இன்று..!

தரிந்து ஜயவர்தன, தரிந்து உடுவரகெதர மற்றும் எம்.எப்.எம்.பஸீர் ஆகியோர் இணைந்து எழுதிய...

கம்பஹாவின் பல பகுதிகளில் 10 மணி நேர நீர்வெட்டு

கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று (14) 10 மணி நேர...