பலஸ்தீன சுதந்திரத்திற்கு ஆதரவு தெரிவித்து கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணி

Date:

பலஸ்தீனத்தின் சுதந்திரத்துக்காக இன்று (30) கொழும்பில் ஆர்ப்பாட்ட பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.

பலஸ்தீன ஒருமைப்பாட்டு மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம், கொழும்பு கொம்பனித்தெருவில் ஆரம்பித்து, அமெரிக்க தூதரகம் வரை பேரணியாக சென்று, அங்கு எதிர்ப்பு முழக்கங்களுடன் தொடரப்பட்டது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் தொழிற்சங்கங்கள், சிவில் சமூக அமைப்புகள் மற்றும் பொதுமக்கள் அரசியல் பிரதிநிதிகளும் பங்கேற்றனர்.

“பலஸ்தீனத்திற்கு சுதந்திரம்”, “தனி நாடு உருவாக்கப்பட வேண்டும்”, “இஸ்ரேல் மேற்கொண்ட யுத்தம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்” என பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன.

பலஸ்தீன மக்களின் நலன் மற்றும் நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும் என வலியுறுத்தும் இந்தப் பேரணியில், கலவரமின்றி அமைதியான முறையில் ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...