காலி மாநகர சபையின் அதிகாரம் தேசிய மக்கள் சக்திக்கு: மேயராக சுனில் கமகே தெரிவு

Date:

காலி மாநகர சபையின் மேயராக தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் சுனில் கமகே 19 வாக்குகளைப் பெற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இன்று (20) மாநகர சபையின் முதல் கூட்டத்தின் போது நடத்தப்பட்ட இரகசிய வாக்கெடுப்பின் மூலம் அவர் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

உள்ளூராட்சித் தேர்தலைத் தொடர்ந்து 36 உறுப்பினர்களைக் கொண்ட காலி மாநகர சபையில் தேசிய மக்கள் சக்தி 17 இடங்களை மட்டுமே வைத்திருந்த போதிலும், இரகசிய வாக்கெடுப்பில் அவருக்கு ஆதரவாக 19 உறுப்பினர்களால் வாக்களித்தனர்.

ஐக்கிய மக்கள் சக்தி, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சிகளைச் சேர்ந்த மொத்தம் 16 உறுப்பினர்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வெளிநடப்பு செய்தனர்.

இதனால் சபையில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டதுடன் ஒரு வாக்கு நிராகரிக்கப்பட்டது. இதற்கிடையில், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின்  உறுப்பினர் துணை மேயராக போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டார்.

Popular

More like this
Related

கொழும்பு பல்கலைக்கழகத்தில் நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களுக்கு சான்றிதழ் வழங்கும் நிகழ்வு

நவீன அரபு மொழி டிப்ளோமா பாடநெறியை வெற்றிகரமாக முடித்த மாணவர்களை கௌரவிக்கும் சிறப்பு...

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகள் வெளியானது

பாடசாலை மாணவர்களுக்கான சுரக்ஷா காப்புறுதி திட்டத்தின் புதிய சலுகைகளைக் கல்வி அமைச்சு...

டிரம்பின் ‘அமைதித் திட்டம்’ வெற்றியளிக்குமா?

உண்மையில் காசா பகுதியை உள்ளடக்கிய மத்திய கிழக்குப் பிராந்தியத்தில் மோதல் அக்டோபர்...

பிரதமர் சீனாவிற்கு விஜயம்

“பெண்கள் மீதான உலகளாவிய தலைவர்கள் கூட்டத்தில்” கலந்து கொள்வதற்காக பிரதமர் கலாநிதி...