ட்ரம்பின் நடவடிக்கைக்கு எதிராக மாபெரும் மக்கள் போராட்டம்: கலவரத்தை கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கை

Date:

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் குடியேற்ற சட்ட நடைமுறைக்கு எதிராக அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தொடரும் மூன்றாவது நாள் போராட்டங்களை அடக்குவதற்கு உதவும் வகையில், லாஸ் ஏஞ்சல்ஸின் வீதிகளில் கலிபோர்னியா பாதுகாப்பு

படையினர் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாக அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.

இந்த நடவடிக்கையை, அந்த மாநில ஆளுநர் கெவின் நிவ்சம் சட்டவிரோதமானது என கண்டித்துள்ளார். மேலும், போராட்டக்காரர்களை பொலிஸார் கைதுசெய்து வருகின்றனர்.
அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றியும் சட்டவிரோதமாகவும் குடியேறியவர்களை கண்டறிந்து நாடு கடத்தும் தீர்மானத்தை ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். இது தொடர்பாக முன்னெடுக்கப்பட்டுள்ள சோதனை மற்றும் கைது நடவடிக்கைகளுக்கு எதிராக தற்போது அந் நாட்டில் போராட்டங்களில் வெடித்துள்ளன.
லொஸ் ஏஞ்ஜல்ஸ் மக்கள் தொகையில் கணிசமானோர் ஹிஸ்பானிக் மற்றும் வெளிநாடுகளில் பிறந்தவர்கள் என மக்கள் தொகை கணக்கெடுப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.

இவ்வாறான பின்னணியிலேயே அமெரிக்காவில் முறையான ஆவணங்கள் இன்றியும், சட்டவிரோதமாகவும் குடியேறியவர்களை கண்டறிந்து நாடு கடத்தும் ட்ரம்பின் தீர்மானத்திற்கமைவாக கைது நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

இதற்காக தேசிய பாதுகாப்பு படையினர் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளதாகவும், அவர்கள்  சட்டம் மற்றும் ஒழுங்கை நிலைநாட்டுவர்கள் எனவும் ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அமெரிக்க தேசிய பாதுகாப்பு படையினரை மீள அழைக்குமாறு கலிபோர்னிய ஆளுநர் கெவின் நிவ்சம் ஜனாதிபதி ட்ரம்பை வலியுறுத்தியுள்ளார்.

ட்ரம்ப் தலையீடு செய்யும் வரை, தமது பிராந்தியத்தில் பிரச்சினை இருக்கவில்லையென அவர் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார். ட்ரம்ப்பின் இந்த நடவடிக்கை இறையாண்மை மீதான பாரிய மீறல் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், ஆர்ப்பாட்டக்காரர்களிடம் அமைதியாக செயற்படுமாறும் கலிபோர்னிய ஆளுநர் கெவின் நிவ்சம் கோரிக்கை விடுத்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...