ஈரான்-இஸ்ரேல் மோதல் குறித்த குழு விவாதம் கொழும்பில்

Date:

ஈரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையிலான சமீபத்திய மோதல் மற்றும் அதன் புவிசார் அரசியல் மற்றும் பிராந்திய தாக்கங்களை ஆராய்வதற்காக சிறப்பு குழு விவாதம் ஒன்று எதிர்வரும் ஜூன் 26, வியாழக்கிழமை மாலை 4.30 மணி முதல் கொழும்பு 10 விஜேவர்தன மாவத்தையில் அமைந்துள்ள தபால் திணைக்கள கேட்போர் கூடத்தில் நடைபெறும்.

இந்த குழு விவாதத்தில் சண்டே டைம்ஸ் பத்திரிகையின் துணை ஆசிரியர் சிரேஷ்ட ஊடகவியலாளர் அமீன் இஸ்ஸதீன், ஜனநாயக சீர்திருத்தங்கள் மற்றும் தேர்தல் ஆய்வுகள் நிறுவனத்தின் நிர்வாக பணிப்பாளர் மஞ்சுள கஜநாயக்க மற்றும் அரசியல் ஆய்வாளர் டாக்டர் ரவூப் ஸெய்ன் ஆகியோர் கலந்து கொள்வார்கள்.

இந்த விவாதம், ஈரான்-இஸ்ரேல் மோதலின் தாக்கங்கள், நடுநிலை நாடுகளின் பங்கு, பாதுகாப்பு சவால்கள் மற்றும் எதிர்கால நிலைமைகள் பற்றி ஆழமான பார்வையை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Popular

More like this
Related

எல்லை நிர்ணயத்துக்கு புதிய குழுவை நியமிக்க அமைச்சரவை அங்கீகாரம்

எல்லை மீள் நிர்ணயத்துக்கென புதிய குழுவொன்றை நியமிப்பதற்கு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க...

பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயத்தினால் “யவ்ம்-இ-இஸ்தெஹ்சால்” தினம் கொழும்பில் அனுஷ்டிப்பு!

இந்திய சட்டவிரோத ஆக்கிரமிப்பு ஜம்மு மற்றும் காஷ்மீரில் ஆகஸ்ட் 5, 2019ல்...

5வது சவூதி ஊடக மன்றம் ரியாத் நகரில்: மன்னரின் அனுசரனையின் கீழ் உலக ஊடக மற்றும் தொழில்நுட்பத் துறையினர் ஒன்று கூடல்

எழுத்து- காலித் ரிஸ்வான் சவூதி அரேபியாவின் பரபரப்பான புதுமைகளின் தலைநகரான ரியாத் நகர்...

ஶ்ரீலங்கா ஜம்இய்யதுல் குர்ரா மற்றும் அல் மகாரிஉல் குர்ஆனிய்யா சங்கத்துக்கும் இடையே புரிந்துணர்வுஒப்பந்தம்!

கடந்த ஜூன் 20ஆம் திகதி மஸ்ஜிதுன் நபவியில் இடம்பெற்ற சந்திப்பின் போது...