அரகலயை அடக்குவதற்கு ஜனாதிபதி ரணில் விதித்த அவசரகாலச் சட்டம் மனித உரிமை மீறலாகும்: நீதிமன்ற தீர்ப்பு

Date:

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதில் ஜனாதிபதியாக இருந்த காலப் பகுதியில்  அரகல போராட்டத்தை அடக்குவதற்கு விதிக்கப்பட்ட அவசரகால  தடைச் சட்டம் அடிப்படை மனித உரிமைகளை  மீறுவதாக உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

இதற்கமைய பதில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பொதுமக்கள் பாதுகாப்பு சட்டத்தின் 2 ஆவது விதிமுறையின் கீழ் பிரகடனப்படுத்திய அவசரகால சட்ட விதிமுறைகள் தன்னிச்சையானதும் அதிகாரமற்றதுமான செயற்பாடென மூவரடங்கிய நீதிமன்ற நீதிபதிகள் குழாமின் பெரும்பான்மையான நீதியரசர்கள் தீர்மானித்துள்ளனர்.

தலைமை நீதிபதி முர்து பெர்னாண்டோ, அர்ஜுன ஒபேசேகர மற்றும் யசந்த கோடகொட ஆகிய நீதிபதிகள் இந்தத் தீர்ப்பை வழங்கினர்.

இது தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட நிலையில் குறித்த சம்பவத்தினால் அடிப்படை மனித உரிமை மீறப்பட்டுள்ளதாக  உயர் நீதிமன்றம்  இன்று தீர்ப்பு வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கொள்கை மாற்றுகளுக்கான மையம், முன்னாள் மனித உரிமை ஆணையாளர் அம்பிகா சற்குணநாதன் மற்றும் லிபரல் இளைஞர் இயக்கம் ஆகியவை இந்த அடிப்படை உரிமைகள் மனுக்களை தாக்கல் செய்திருந்தன.

Popular

More like this
Related

தேசப் பற்றுக்கு நபிகளார் ஒரு குறியீடு: சுதந்திர தின விசேட கட்டுரை!

முஹம்மத் பகீஹுத்தீன் பிறந்த மண்ணையும் தேசத்தையும் நேசிப்பது மனிதனிடம் உள்ள ஒரு இயற்கையான...

இனவாதம் மற்றும் மதவாதம் அற்ற சமத்துவ சமூகமே எமது இலக்கு: பிரதமர் உறுதி.

78 ஆவது தேசிய சுதந்திர தினத்தை ஒரு புதிய சுதந்திரம் குறித்த...

பேரண்டப் பொருளாதார நன்மைகள் அனைத்து இன மக்களையும் சென்றடைய வேண்டும் – ஜனாதிபதி அநுர

கடந்த நூற்றாண்டில் தவறவிட்ட வெற்றிகளை நாட்டுக்குப் பெற்றுக்கொடுத்து, அனைவரினதும் கனவான, ‘வளமான...

புதிய கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன

சிரேஷ்ட பிரதி கணக்காய்வாளர் நாயகமாகப் பணியாற்றும் எல்.எஸ்.ஐ. ஜயரத்னவை புதிய கணக்காய்வாளர்...