அரிசி மாபியாவை ஒழிக்க அரசு விசேட திட்டம்!

Date:

நாட்டில் நிலவும் கீரி சம்பா அரிசிக்கான தட்டுப்பாட்டை இல்லாதொழிக்கும் வகையில் இந்தியாவிலிருந்து கீரி சம்பா அரிசியையொத்த ஜீ.ஆர். ரக அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள அரிசிக்கான மாபியாக்களை ஒழிக்கும் வகையிலேயே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க இந்தியாவிலிருந்து 40ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படுவதோடு, ஒரு கிலோ அரிசியை 250 ரூபாவுக்கும் குறைந்த விலையில் விற்பனை செய்யமுடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறுபோக அறுவடையின் பின்னர் நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், எனினும், சீரற்ற காலநிலை மற்றும் ஏனைய காரணங்களால் அவை தடைப்படுமிடத்து அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

மண் மேடு சரிந்து புதையுண்ட 6 பேர்:மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதி!

மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ராணி தோட்டத்தில் இன்று...

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...