அரிசி மாபியாவை ஒழிக்க அரசு விசேட திட்டம்!

Date:

நாட்டில் நிலவும் கீரி சம்பா அரிசிக்கான தட்டுப்பாட்டை இல்லாதொழிக்கும் வகையில் இந்தியாவிலிருந்து கீரி சம்பா அரிசியையொத்த ஜீ.ஆர். ரக அரிசியை இறக்குமதி செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என வர்த்தக அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்துள்ளார்.

நாட்டிலுள்ள அரிசிக்கான மாபியாக்களை ஒழிக்கும் வகையிலேயே இந் நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

அதற்கிணங்க இந்தியாவிலிருந்து 40ஆயிரம் மெற்றிக் தொன் அரிசி இறக்குமதி செய்யப்படுவதோடு, ஒரு கிலோ அரிசியை 250 ரூபாவுக்கும் குறைந்த விலையில் விற்பனை செய்யமுடியுமென்றும் அவர் தெரிவித்துள்ளார்.

சிறுபோக அறுவடையின் பின்னர் நாட்டில் அரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படாது என சுட்டிக்காட்டியுள்ள அமைச்சர், எனினும், சீரற்ற காலநிலை மற்றும் ஏனைய காரணங்களால் அவை தடைப்படுமிடத்து அரிசியை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுப்பதாகவும் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.

 

Popular

More like this
Related

இன்று முதல் முச்சக்கர வண்டி கட்டணங்களில் மாற்றம்

ஒரு கிலோ மீட்டருக்கான முச்சக்கர வண்டி கட்டணத்தை 10 ரூபாவினால் அதிகரிப்பதற்கு...

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தின் கீழ் அநீதியான கைது: உச்ச நீதிமன்றத்தில் மாவனல்லை இளைஞருக்குக் கிடைத்த நீதி.

மாவனல்லைப் பகுதியைச் சேர்ந்த 21 வயதுடைய முகமது ரிஃபாய் முகமது சுஹைல்...

பாண் உள்ளிட்ட பேக்கரி உற்பத்திப் பொருட்களின் விலை உயர்வு!

இன்று நள்ளிரவு முதல் 450 கிராம் எடையுள்ள ஒரு இறாத்தல் பாணின்...

பாகிஸ்தானின் 86-வது தேசிய தினம்: இலங்கையில் விமரிசையான கொண்டாட்டம்!

இலங்கையில் வாழும் பாகிஸ்தானிய சமூகம் மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் உயர்ஸ்தானிகராலயம் பாகிஸ்தானின்...