இன்று முதல் செயல்பாட்டிற்கு வரும் GovPay திட்டம்!

Date:

மேல் மாகாணத்தில் இன்று (28) முதல் Government Digital Payment Platform (GovPay) ஊடாக நேரடியாக அபராதம் செலுத்தும் முறை செயல்படுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனை தெரிவித்தார்.

இதேவேளை இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்குத் தேவையான அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று ஆயிரம் போக்குவரத்து பொலிஸ் அதிகாரிகளுக்கு கையடக்க தொலைபேசிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

டிஜிட்டல் விவகார அமைச்சின் வலுவான அர்ப்பணிப்பு காரணமாக இந்தத் திட்டத்தை மிக விரைவாக ஆரம்பிக்க முடிந்ததாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

Popular

More like this
Related

உலக சுற்றுச்சூழல் தினம் 2026: புத்தளத்தின் சூழலியல் சவால்களும் உள்கட்டமைப்புக்கான எச்சரிக்கையும்!

ஆக்கம்: மொஹமட் ரிஃபாய் ஐக்கிய நாடுகள் சபையினால் பிரகடனப்படுத்தப்பட்டு, இன்று அதன் 54ஆவது...

நாடு முழுவதும் தீவிரமடையும் டெங்கு அச்சுறுத்தல்!

டெங்கு நுளம்பு ஒழிப்பிற்கான விசேட வேலைத்திட்டம் ஒன்றை எதிர்வரும் 08, 09...

முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களுக்கு புதிய கட்டுப்பாடுகள்

உரிய தரநிலைகளுக்கு அமைய பராமரிக்கப்படாத முதியோர் இல்லங்கள் மற்றும் பராமரிப்பு நிலையங்களுக்கு...

டெல்லி மால்வியா ஹோட்டல் தீ விபத்து: 21 பேர் பலியான சோகத்திலும் மனிதநேயத்தை மீட்டெடுத்த 5 முஸ்லிம் இளைஞர்கள்!

தெற்கு டெல்லியின் மால்வியா நகர் பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் கடந்த...