மாலைதீவிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தை நிறைவு செய்து நாடு திரும்பினார் ஜனாதிபதி

Date:

கடந்த 28ஆம் திகதி ஆரம்பித்த மாலைதீவுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை வெற்றிகரமாக நிறைவு செய்து, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நேற்று (30) இரவு நாடு திரும்பினார்.

மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவின் (Dr. Mohamed Muizzu) அழைப்பின் பேரில் ஜனாதிபதி இந்த உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்.

இந்த உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சுவுடனும் மாலைதீவு அமைச்சரவை அமைச்சர்கள் உட்பட அரச பிரதானிகளுடன் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த இருதரப்பு, பிராந்திய மற்றும் சர்வதேச பிரச்சினைகள் குறித்து விரிவான கலந்துரையாடல்களையும் நடத்தினார்.

இலங்கைக்கும் மாலைதீவுக்கும் இடையிலான பரஸ்பர சட்ட உதவி வழங்கல் தொடர்பான ஒப்பந்தம் மற்றும் மாலைதீவு வெளியுறவு சேவை நிறுவனம் (FOSIM) மற்றும் பண்டாரநாயக்க சர்வதேச இராஜதந்திர பயிற்சி நிறுவனம் ஆகியவற்றுக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் என்பனவும் பரிமாறப்பட்டன.

“குரும்பா மோல்டீவ்ஸ்” விடுதியில் ஜனாதிபதிக்கு மாலைதீவு ஜனாதிபதி கலாநிதி முகமது முய்சு விசேட இராப்போசன விருந்துபசாரம் அளித்தார்.

மாலைதீவு மற்றும் இலங்கைக்கு இடையே இராஜதந்திர உறவுகள் நிறுவப்பட்டதன் 60 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் தலைநகர் மாலேயில் உள்ள சுல்தான் கார்டனில் ஜனாதிபதி மரக்கன்றொன்றை நட்டார்.

மேலும், மாலைதீவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் மற்றும் இலங்கை வர்த்தக சபையின் இலங்கை-மாலைதீவு வணிக கவுன்சில் ஏற்பாடு செய்த வணிக மன்றத்திலும், மாலைதீவில் உள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் ஏற்பாடு செய்த மாலைதீவில் வசிக்கும் இலங்கையர்களையும் சந்தித்தித்து ஜனாதிபதி உரையாற்றினார்.

Popular

More like this
Related

வெலிகம பிரதேச சபையின் வெற்றிடத்துக்கு சமீர தனுஷ்க டி சில்வா நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த சமீர தனுஷ்க டி சில்வா...

டெல்லி குண்டு வெடிப்பு: வெளிப்படையான, உயர் மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்- ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர் வேண்டுகோள்

செங்கோட்டை வெடிச் சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணை தேவை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்...

நம்பிக்கையை நசுக்கிய வரவு–செலவுத்திட்டம்: புத்தளம் மரிக்காரின் கவிதை வரிகள்!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வரவு–செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி ஒதுக்கியுள்ள நிதித்திட்டங்கள் குறித்து...

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க கைது!

முன்னாள் அமைச்சர் பிரசன்ன ரணதுங்க இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவால் கைது...