உயர் கல்வித் துறையில் ஐந்து தசாப்தம் கண்ட ஜாமிஆ நளீமிய்யா உயர் கலாபீடம் – பேருவளை: 2025/26ஆம் கல்வியாண்டிற்கான புதிய மாணவர் பிரவேசப் பரீட்சை

Date:

2025/2026ஆம் கல்வியாண்டிற்கான புதிய மாணவர்களை (முஸ்லிம் ஆண்) தெரிவு செய்வதற்கான நேர்முக மற்றும் எழுத்துப்பரீட்சைகள் 2025/07/26 மற்றும் 27 ஆம் திகதிகளில் ஜாமிஆ நளீமிய்யா வளாகத்தில் நடைபெறவுள்ளதால், தகுதிவாய்ந்த மாணவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் (இணைய வழி ஊடாக) கோரப்படுகின்றன.

ஏக காலத்தில் மாணவர்கள் பின்வரும் பாட நெறிகளில் பயிற்றுவிக்கப்படுவர்: முதல் மூன்று வருடங்கள்,

1. அடிப்படை இஸ்லாமியக் கற்கைகள்
2. அறபு மொழி
3. க.பொ.த உயர் தரம் (கலை மற்றும் வர்த்தகப் பிரிவுகள்)

க.பொ.த உயர் தரத்திற்கு பின்னரான நான்கு வருடங்கள்

1. இஸ்லாமியக் கற்கைகளில் சிறப்புத் தேர்ச்சி
2. பல்கலைக்கழக வெளிவாரிப் பட்டப்படிப்பு

பிரவேசப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான தகைமைகள்.

1. க.பொ.த. ( சா.த) பரீட்சையில் இஸ்லாம், தமிழ், கணிதம் உட்பட ஆறு பாடங்களில் சித்தியடைந்திருத்தல். அவற்றில் மூன்று பாடங்களில் திறமைச் சித்திகளைப் (C) பெற்றிருத்தல்.

வர்த்தகப் பிரிவில் இணைவதற்கு மேற்குறிப்பிட்ட தகைமைகளுடன் கணிதம் அல்லது வரலாறு அல்லது வணிகமும் கணக்கீட்டுக் கல்வியும் பாடத்தில் திறமைச் சித்தியைப் (C) பெற்றிருத்தல்.

2. 2008.01.31 ஆம் திகதிக்கு பின்னர் பிறந்தவராக இருத்தல்.
3. தேக ஆரோக்கியமும், நற்பண்புகளும் உடையவராக இருத்தல்.

நேர்முக மற்றும் எழுத்துப் பரீட்சைகள் நடைபெறும் நாளன்று பரீட்சாத்திகள் எடுத்து வரவேண்டிய ஆவணங்கள்.

1. பிறப்புச் சாட்சிப் பத்திரம்
2. க.பொ.த. (சா.த) பரீட்சை பெறுபேற்று அட்டை
3. தேசிய அடையாள அட்டை
4. மஸ்ஜிதினால் வழங்கப்பட்ட நற்சான்றிதழ்
5. பாடசாலை அதிபரினால் வழங்கப்பட்ட நற்சான்றிதழ்
6. புலமைச் சான்றிதழ்கள்

பரீட்சாத்திகளின் கவனத்திற்கு

* கல்வி, விடுதி வசதிகள் இலவசம்
* மாதாந்த உணவுக்கட்டணம் 15000 ரூபாய்
* சேர்வுக் கட்டணம் 20000 ரூபாய்

விண்ணப்பப் படிவத்தை பூர்த்தி செய்ய www.naleemiah.edu.lk என்ற இணைய தளத்தை நாடவும். (QR) ஆன்லைன் ஊடாக மாத்திரமே விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்படும்.

விண்ணப்ப முடிவுத் திகதி: 2025.07.21
மேலதிக விபரங்களுக்கு 076 372 7066
முதல்வர்,
ஜாமிஆ நளீமிய்யா கலாபீடம்,
பேருவளை.

Popular

More like this
Related

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் : பரிந்துரைகளை அமுல்படுத்த விசேட நிபுணர் குழு!

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணை நடத்துவதற்கும் இவ்வாறான சம்பவங்களைத் தடுப்பதற்கான...

சுரேஷ் சலே பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றில் ஆஜர்

பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின்...

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா மாத்தறையில்..!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் திருவிழா எதிர்வரும் மே 27...

காசாவுக்கான உலகளாவிய ‘சுமுத் ஃப்ளோட்டிலா’ பயணம்: இலங்கை பிரதிநிதியாக சமீரா மெஹ்பூப்தீன் பங்கேற்பு.

பலஸ்தீனத்தின் மீதான முற்றுகையை முறியடித்து, அங்குள்ள பொதுமக்களுக்குத் தேவையான அத்தியாவசிய உதவிகளை...