இலஞ்ச, ஊழல் விசாரணை அதிகாரியை அச்சுறுத்திய குற்றச்சாட்டு: விளக்கமறியலில் உள்ள வைத்தியரின் மகள் கைது.

Date:

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள விசேட வைத்திய நிபுணர் மஹேஷி விஜேரத்னவின் மகள் கைது செய்யப்பட்டுள்ளார்.

இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் அதிகாரி ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் தொடர்பாக இக்கைது இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

நரம்பியல் விசேட மருத்துவ நிபுணர் மஹேஷி விஜேரத்ன தம்மிடம் வரும் நோயாளர்களை தனியார் மருந்தகங்களுக்கு அனுப்பி அங்கு மருந்துகள், உபகரணங்களை கொள்வனவு செய்ய பணிப்புரை விடுத்தமை, முறைகேடாக வைத்தியசாலை நடவடிக்கைகளை முன்னெடுத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்டு தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

அண்மையில் (04) குறித்த வைத்திய நிபுணரின் மகள், இலஞ்ச ஊழல் ஆணைக்குழு அதிகாரிகளுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்து மிரட்டிய சம்பவமொன்று இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

Popular

More like this
Related

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...

மழை, காற்று நிலைமை எதிர்வரும் நாட்களில் மேலும் அதிகரிக்கும்

தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த குறைந்த அழுத்தப் பிரதேசம்...