சீதாவக்கை பிரதேச சபை தொடர்பில் தாக்கல் செய்த மனு தள்ளுபடி

Date:

சீதாவக்கை பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உப தவிசாளரைத் தேர்ந்தெடுப்பதற்காக இரகசிய வாக்கெடுப்பு நடத்துவதைத் தடுத்து, மேல் மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் சாரங்கிகா ஜெயசுந்தரவுக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்த மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளாமல் தள்ளுபடி செய்து மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

குறித்த மனுவை சீதாவக்க பிரதேச சபையின் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தாக்கல் செய்திருந்தனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெனாண்டோ ஆகியோர் அடங்கிய நீதிபதிகள் அமர்வு மேற்படி உத்தரவை பிறப்பித்துள்ளது.

இதேவேளை, இந்த விடயங்களை முன்வைத்து மாவதகம மற்றும் சீதாவக்கை நகர சபை சார்பில் சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

 

Popular

More like this
Related

போதைப்பொருள் மற்றும் ஆயுத சுற்றிவளைப்புகள் 2025இல் அதிகரிப்பு!

2024ஆம் ஆண்டுடன் ஒப்பிடுகையில் 2025ஆம் ஆண்டில் பெருமளவிலான போதைப்பொருட்கள் மற்றும் ஆயுதங்களைக்...

லாஃப்ஸ் எரிவாயு விலை அதிகரிப்பு!

நேற்று (06) நள்ளிரவு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லாப்ஸ் சமையல்...

பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 2.00 மணிக்கு பின் இடியுடன் மழை

இன்றையதினம் (07) நாட்டின் ஊவா மாகாணத்திலும் மாத்தளை, நுவரெலியா, அம்பாறை, மட்டக்களப்பு...

‘தொழில்நுட்ப ஜாம்பவான்கள் குறைக்கட்டும்’: சமூக வலைதளத் தடையை எதிர்க்கும் எலான் மஸ்க்கிற்கு ஸ்பெயின் பிரதமர் பதிலடி.

16 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்குத் தடை விதிக்கும் ஸ்பெயின்...