மஹிந்தானந்த, நளின் பெர்னாண்டோ மீது மற்றுமொரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

Date:

சிறைத்தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, நளின்  பெர்னாண்டோ மற்றும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி ஆகியோருக்கு எதிராக இன்று (21) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, ​​சதொச ஊடாக 14,000 கேரம் மற்றும் தாம் பலகைகளை கொள்வனவு செய்து அரசியல் ஆதாயம் பெறும் நோக்கில் விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகித்ததன் மூலம் பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாக் கூறி இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

குற்றப் பத்திரிகையைத் தொடர்ந்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன மூன்று பிரதிவாதிகளையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.

எனினும், அவர்களுக்கு ஏற்கனவே உள்ள சிறைத்தண்டனைகள் காரணமாக, மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோரை அடுத்த திட்டமிடப்பட்ட விசாரணை நாளில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், தற்போதைய வழக்கில் குற்றச்சாட்டுகளின் நிலைத்தன்மையை எதிர்த்து, ஆரம்ப ஆட்சேபனைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

 

ஆரம்ப ஆட்சேபனைகளை பரிசீலிக்க செப்டம்பர் மாதம்  4 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

Popular

More like this
Related

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (13) நாட்டின் மேல், சப்ரகமுவ, வடமேல் மாகாணங்களிலும் காலி, மாத்தறை,...

விசேட தேவையுடையோருக்கென பிரத்தியேக பஸ் சேவை

வேலைத்திட்டத்தின் கீழ் விசேட தேவையுடைவர்களுக்கான முன்னுரிமை அடிப்படையிலான பஸ் சேவைக்கான பஸ்கள்...

இலங்கையின் சனத்தொகை மாற்றம்: காலநிலை மாற்றம் மற்றும் கொள்கை குறைபாடுகளால் ஏற்படும் சமூக-பொருளாதார நெருக்கடிகள்

இலங்கை ஒரு விரைவான சனத்தொகை மாற்றத்தை எதிர்கொண்டு வருகின்றது. தற்போது நாட்டின்...

இலங்கையின் புதிய இராஜதந்திரிகள் தூதுவர்களின் நியமனங்களுக்கு நாடாளுமன்றம் அனுமதி

வெளிநாடுகளில் உள்ள இலங்கைத் தூதரகங்களின் பிரதானிகளாக நியமிக்கப்படுவதற்காக, அண்மையில் ஜனாதிபதி அநுர...