இஸ்ரேலின் டெல் அவிவிவாக மாறிய அறுகம்பே?: வெளிநாட்டு சுற்றுலாப் பயணியின் தகவல்!

Date:

நாட்டில் அதிகரித்துள்ள இஸ்ரேலிய ஆதிக்கம் தொடர்பில் சுற்றுலா பயணியொருவர் இலங்கை அரசாங்கத்திடம் முக்கிய கோரிக்கையொன்றை முன்வைத்துள்ளார்.

இந்த நிலையில், அறுகம்பே குடாவில் இஸ்ரேலிய நாட்டினரின் வருகை அதிகரித்து வருவது குறித்து சுற்றுலா பயணியான டி.ஜே டாம் மோனகிள் என்பவர் காணொளியொன்றில் கவலை வெளியிட்டுள்ளார்.

குறித்த காணொளியில் அவர், “அறுகம்பே இலங்கையில் இருப்பதாக நான் நினைத்தேன், ஆனால் அது இஸ்ரேலின் டெல் அவிவில் இருப்பது போல் தெரிகிறது.” என குறிப்பிட்டுள்ளார்.

அத்தோடு, அறுகம்பே குடா இஸ்ரேலியர்களுக்கு வழங்குவதாக 50,000 ஆண்டுகளுக்கு முன்பு வாக்குறுதி அளிக்கப்பட்டதா? என்றும் அவர் அந்த காணொளியில் கேள்வியெழுப்பியுள்ளார்.

அப்பகுதியில் உள்ள பல்வேறு உணவகங்களின் காட்சிகளைப் பகிர்ந்து கொண்ட டாம் மோனகிள், சிங்களம் அல்லது தமிழுக்குப் பதிலாக பல இடங்களில் ஹிப்ரு மொழி பயன்படுத்தப்படுவதை சுட்டிக்காட்டியதோடு, சில இடங்களில் இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளுக்கு ஆதரவான பிரச்சார ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டியிருப்பதையும் அடையாளங்காட்டியுள்ளார்.

இதேவேளை,  அறுகம்பே குடாவில் உள்ளூர்வாசிகளைத் தடைசெய்து இஸ்ரேலியர்கள் நிகழ்வுகளை நடத்தியதையும் அவர் அதன்போது வெளிப்படுத்தியுள்ளார்.

இந்த நிலையில், குறித்த நிலைமையை கண்டுகொள்ளாமல் இருக்க வேண்டாம் என இலங்கை அரசாங்கத்தை மேற்கோற்காட்டி கோரிக்கையொன்றையும் டாம் மோனகிள் முன்வைத்துள்ளார்.

Popular

More like this
Related

எரிபொருள் விநியோக முறைகேடுகளுக்கு 119 தொலைபேசி வசதி

QR குறியீடுகளின்றி  சட்டவிரோதமாக எரிபொருள் பெறும் சம்பவங்களை முறைப்பாடு செய்வதற்கு   119...

நாட்டின் சில பகுதிகளில் வெப்பநிலை எச்சரிக்கை மட்டத்தில்

இன்றையதினம் (17) நாட்டின் மத்திய, சப்ரகமுவ, தென், ஊவா மாகாணங்களின் பல...

இஸ்ரேல் சட்டங்களை மீறியமைக்காக 9 இலங்கையர்கள் தாயகம் திரும்பினர்!

இஸ்ரேலின் நடைமுறையிலுள்ள குடிவரவு சட்டங்களை மீறியமைக்காக கைது செய்யப்பட்ட 9 இலங்கை பிரஜைகள்,...

இந்தியாவின் RAW மற்றும் RSS மீது பொருளாதாரத் தடைகளை விதிக்க பரிந்துரை: அமெரிக்க ஆணையத்தின் அதிரடி அறிக்கை!

இந்தியாவில் மத சுதந்திரம் கடுமையாக மீறப்படுவதாகக் கூறி, இந்தியாவின் உளவு அமைப்பான...