சட்டத்தரணி சர்ஜூன் ஜமால்தீன் எழுதிய “ஈஸ்டர் தாக்குதல்கள் – நீதியும் தண்டனையும்” என்ற நூலின் வெளியீட்டு விழா எதிர்வரும் ஜூலை 12ஆம் திகதி சனிக்கிழமை பிற்பகல் 2.00 மணிக்கு, வெள்ளவத்தை சைவ மங்கையர் கழக மண்டபத்தில் நடைபெறவுள்ளது.
செயற்பாட்டாளர் எஸ். சிவகுருநாதன் தலைமையில் நடைபெறும் இந்நிகழ்வில், பத்திரிகையாளர் வீ. தனபாலசிங்கம் மற்றும் அலியார் அசீஸ் (வெளிநாட்டுத் தூதுவர்) ஆகியோர் சிறப்புரை ஆற்றவுள்ளனர்.
மூன்று வருடங்களுக்கு மேலாக ஆய்வு செய்து எழுதப்பட்டுள்ள இந்த நூல், 2019 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஈஸ்டர் தாக்குதல்களை மையமாகக் கொண்டது. மிக விரிவான ஆவணங்கள், தரவுகள் மற்றும் நியாயமான விசாரணைகள் அடிப்படையில் இந்த நூல் அமைந்துள்ளது.