காசாவின் துயரம் எல்லோருக்கும் பொதுவான மனிதாபிமானத்துக்கான சோதனையாகும். குழந்தைகள் உட்பட முழுக் குடும்பங்களும் கொல்லப்படுகின்றன.
எஞ்சியவர்கள் பசியால் வாடுகின்றனர். உயிர்வாழ்வதையும் மனித கௌரவத்தையும் புறக்கணிக்கும் இந்தப் பயங்கரம் முடிவுக்கு வர வேண்டும், இது மிக அடிப்படையான பண்பாடுகளையே மீறுவதாகும் என மலேசியப் பிரதமர் அன்வர் இப்ராஹிம் தனது x தளத்தில் அவசர வேண்டுகோள் விடுத்துள்ளார்.
x தளத்தில் அவர் பேசி வெளியிட்டுள்ள காணொளியில், இந்த விடயத்தில் அவசரமாகச் செயல்படுமாறு மலேசியா அனைத்து உலகத் தலைவர்களையும்கேட்டுக்கொள்கிறது.
சர்வதேச சட்டத்தில் நம்பிக்கை கொண்ட ஒவ்வொரு அரசாங்கமும், மனித உயிரை மதிப்பதாகக் கூறும் ஒவ்வொரு தேசமும் இதற்காக ஒரே குரலில் பேச வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பில் , இஸ்ரேல் மீது செல்வாக்கு செலுத்தும் அனைவரும் உறுதியாகச் செயல்படுவதற்கான தைரியத்தை வரவழைத்துக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக்கொள்கிறேன்.
கொலையை உடனடியாக முடிவுக்குக் கொண்டுவரவும், கண்மூடித்தனமான குண்டுவெடிப்புகளை நிறுத்தவும், மனிதாபிமான உதவி தேவைப்படுபவர்களுக்கு தடையின்றி நிவாரணம் சென்றடைவதை உறுதி செய்யவும் தமது செல்வாக்கைப் பயன்படுத்துமாறு, குறிப்பாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பிடம், நான் கேட்டுக்கொள்கிறேன்.
நேர்மையான தலைமைக்கான நேரம் இது. நாம் பாதுகாப்பதாகக் கூறும் மனிதப் பெறுமானங்களைகளை நிலைநிறுத்த வேண்டிய நேரம் இது.
காசாவிற்கு நிவாரணம் வழங்கவும், மனிதகுலத்தின் அடிப்படை நெறிமுறைகளை மீட்டெடுக்கவும், வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு என அனைத்து நாடுகளுடனும் இணைந்து பணியாற்றுவதற்கு மலேசியா தயாராக உள்ளது.
ஒதுங்கி இருந்தவர்களாக நாம் நினைவுகூரப்படக்கூடாது. நமது மனசாட்சி நம்மை வழிநடத்தட்டும். துன்பப்படுபவர்களுக்கு இரக்கம் காட்டுவோம், மனிதகுலத்தின் நன்மைக்காக அமைதியைப் பேணுவோம் என்வும் அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.