“சகோதர வாஞ்சையுடன் மாணவர்களை வரவேற்போம்”: தென்கிழக்குப் பல்கலையில் பகிடிவதைக்கு எதிரான பிரகடனம்!

Date:

இஸ்லாமியக் கற்கைகள் மற்றும் அரபுமொழி பீடத்தின் ஏற்பாட்டில், தென்கிழக்குப் பல்கலையில் பகிடிவதைக்கு எதிரான பிரகடனத்துடன், 2023/2024 கல்வியாண்டிற்காக புதிய மாணவர்களை இணைத்துக் கொள்ளும் நிகழ்வு நேற்று (01) இடம்பெற்றது.

இங்கு இளங்கலை மாணவர் வழிகாட்டி நூல் ஒன்றும் நிகல்நிலையூடாக் வெளியீடு செய்யப்பட்டது. இரண்டாம் ஆண்டு மாணவர்களால் பகிடிவதைத் தடுப்பு அறிவிப்பு ஒன்றும் பிரகடனப்படுத்தப்பட்டது.

குறித்த பிரகடனத்தில் 2022 மற்றும் 2023 கல்வியாண்டு மாணவர்களாகிய நாங்கள் 2023 மற்றும் 2024 மாணவர்களை உள்ளீர்க்கும் இந்த மகத்தான நாளில் ஜூலை முதலாம் திகதி 2025ம் பின்வரும் உடன்பாட்டை பிரகடனப்படுத்துகிறோம் என்பதை மகிழ்ச்சி அடைகின்றோம்.

இங்கு வருகை தந்திருக்கின்ற 2023 மற்றும் 2024 கல்வியாண்டு மாணவர்களை எவ்வித பகிடிவதைகளுக்கும் உட்படுத்தாமல் சகோதர வாஞ்சையுடன் இந்தப் பல்கலைக்கழகத்திற்குள்ளும் வெளிவிலும் அவர்களை நாங்கள் பார்ப்போம் என்று பிரகடனப்படுத்துகிறோம்.
முதலாம் வருட மாணவர்களுக்கு உடல் ரீதியாகவோ, உள ரீதியாகவோ புண்படுத்தக்கூடிய எந்தவித நடவடிக்கைகளிலும் நாங்கள் ஈடுபடுவதில்லை என்ற உடன்பாடையும் உங்கள் முன் இப்போதிருந்து நாங்கள் பிரகடனப்படுத்துகிறோம்.

இந்தப் பிரகடனத்தை நாங்கள் எவ்வித அழுத்தமும் இன்றி நாமாகவே எங்கள் தொகுதி மாணவர்கள் சார்பில் தெளிவித்துக் கொள்கிறோம். வரலாற்று முக்கியத்துடன் மிகக் இந்த கைங்கரியத்தை ஏனைய பீட மாணவர்களும் பின்பற்ற வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கின்றோம்.

நிகழ்வின்போது முகாமைத்துவ வர்த்தக பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் கலாநிதி ஏ.எம்.எம். முஸ்தபா, நூலகர் எம்.எம். றிபாவுடீன், பேராசிரியர்கள் திணைக்களங்களின் தலைவர்கள், தென்கிழக்குப் பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத்தின் தலைவர் சிரேஷ்டவிரிவுரையாளர் எம்.ஏ.எம். சமீம், சிரேஷ்ட கனிஷ்ட விரிவுரையாளர்கள் சிரேஷ்ட உதவி பதிவாளர் எம்.எச். நபார், நிர்வாக உத்தியோகத்தர்கள் கல்விசாரா உத்தியோகத்தர்கள் பெற்றோர்கள் என பலரும் பங்கு கொண்டிருந்தனர்.

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...