சபாத் இல்லத்தை அகற்றக்கோரி அட்டாளைச்சேனையில் ஆர்ப்பாட்டம்!

Date:

பொத்துவில் அறுகம்பை பிரதேசத்தில் இஸ்ரேலியர் நடத்தி வரும்  “சபாத் இல்லத்தை” உடனடியாக மூட அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி அட்டாளைச்சேனை பிரதேச சபை முன்றலில் கண்டன ஆர்ப்பாட்டமொன்று இன்று (21) முன்னெடுக்கப்பட்டது.

அட்டாளைச்சேனை பிரதேச சபையின் 2025ஆம் ஆண்டுக்கான முதலாவது (கன்னி) அமர்வில், தவிசாளர் ஏ.எஸ்.எம். உவைஸ் தலைமையில் இந்த விவகாரம் குறித்து கலந்துரையாடல் இடம்பெற்றது.

அனைத்து உறுப்பினர்களும் இதுகுறித்து கருத்து தெரிவித்ததுடன், சபாத் இல்லத்தினை எதிர்த்து ஒருமனதாக கண்டன தீர்மானமும் நிறைவேற்றப்பட்டது.

அத்தோடு சபை முடிவில் கண்டன ஆர்ப்பாட்டம் முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டது.

இதன்போது பொதுமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு, நாட்டின் பாதுகாப்புக்கும் மதசார்பற்ற துறையிற்கும் முரணான இத்தகைய அமைப்புகள் எதிர்கொள்ளப்பட வேண்டும் என உறுப்பினர்கள் வலியுறுத்தினர்.

அரசே அறுகம்பை சபாத் இல்லத்தை உடன் அகற்று, இலங்கை அடுத்த பலஸ்தீனா?, இஸ்ரேலின் அடுத்த கொலனியாக இலங்கையை ஆக்க இடமளிக்காதே போன்ற பல வாசகங்களை ஏந்தியவாறு உறுப்பினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Popular

More like this
Related

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...

கற்றல் கற்பித்தல் தொடர்பிலான அமேசனின் விசேட செயலமர்வு BMICH இல்!

அமேசன் உயர்கல்வி நிறுவனத்தின் ஏற்பாட்டில் கற்பித்தல் மற்றும் கற்றலில் மன உறுதி...