கொரோனா -19 பரப்பியதாகத் தப்லீக் ஜமாஅத்துடன் தொடர்புடைய 70 பேர் மீது வழக்குப் பதிவு செய்து ஐந்தாண்டுகள் நிறைவடையும் நிலையில், இந்த வழக்குகளில் உள்ள 16 எஃப்.ஐ.ஆர்.களையும், குற்றப்பத்திரிகைகள் உள்ளிட்ட அடுத்தகட்ட நடவடிக்கைகளையும் டெல்லி உயர் நீதிமன்றம் நேற்று (17) ரத்து செய்துள்ளது.
இந்த வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ஐந்தாண்டுகளுக்குப் பிறகு இந்தத் தீர்ப்பு வெளியாகியுள்ளது.
இந்த மாநாடே பெரிய அளவிலான நோய்ப் பரவலுக்குக் காரணம் என்பதை நிரூபிக்க வலுவான அறிவியல் சான்றுகள் இல்லாததைக் காரணம் காட்டியே நீதிமன்றம் இந்த முடிவை எட்டியுள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் (ICMR) 2020 ஆம் ஆண்டின் தொடக்கக் கணக்கீடுகளின்படி, தப்லீக் ஜமாஅத் மாநாடு சில கோவிட் பாதிப்புகளுக்குக் காரணமான போதிலும், சமூகப் பரவலுடன் ஒப்பிடுகையில் அதன் பங்கு மிகைப்படுத்தப்பட்டது என்பதை நீதிமன்றமே தற்போது ஒப்புக்கொண்டுள்ளது.
தொற்றுநோய் சட்டம் (Epidemic Diseases Act) மற்றும் இந்திய தண்டனைச் சட்டம் (IPC) ஆகியவற்றின் கீழ் பதிவு செய்யப்பட்ட எஃப்.ஐ.ஆர்.களை ரத்து செய்வதன் மூலம், பெருந்தொற்றின் கொந்தளிப்பான ஆரம்ப கட்டத்தில், இஸ்லாமிய வெறுப்புணர்வைத் தூண்ட இந்த அவசரகாலச் சட்டங்கள் எவ்வாறு பயன்படுத்தப்பட்டன என்பது குறித்த ஒரு முக்கியமான மறுபரிசீலனையை இது பிரதிபலிப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
2020-இல் நடந்த தப்லீக் ஜமாஅத் மாநாடு கோவிட்டை முழுமையாகப் பரப்பியது என்று கூறி இந்தியாவில் முஸ்லிம் வெறுப்புப் பிரச்சாரம் முன்னெடுக்கப்பட்டி ருந்தன.