துருக்கிக்கான இலங்கைத் தூதுவருக்கு பிரியாவிடை நிகழ்வு: பல பிரமுகர்கள் பங்கேற்பு

Date:

தனது சேவைக் காலத்தை நிறைவு செய்து நாடு திரும்பவுள்ள துருக்கிக்கான இலங்கைத் தூதுவர் ஹசந்தி திஸாநாயக்க அவர்களுக்கு பிரியாவிடை நிகழ்வு  ஜூலை 6ஆம் திகதி துருக்கி தூதரக அலுவலகத்தில் நடைபெற்றது.

இந்த நிகழ்வை காம்ஸே தாஹா ஓசெரென் மற்றும் டாக்டர் யால்சின் ஜென்ச் ஆகியோர் இணைந்து நடத்தினர்.

இந்த சிறப்பான விழாவில் பலர் பங்கேற்றனர். அதில், பல தூதரகங்களின் தூதுவர்கள் மற்றும் இராஜதந்திர அதிகாரிகள், இஸ்தான்புல் மற்றும் நெவ்செஹிர் நகரங்களின் இலங்கை தூதுவர்கள்,துருக்கி அரசின் மூத்த அதிகாரிகள், வணிகத்துறையைச் சேர்ந்த முக்கியமான பிரமுகர்கள், பிரபலமான பேராசிரியர்கள், புகழ்பெற்ற கலைஞர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்டோர் இடம்பெற்றனர்.

இந்நிகழ்வு தூதுவரின் சேவையை பாராட்டும் விதமாகவும், பணி மற்றும் அவரது அர்ப்பணிப்பு உணர்வை பாராட்டும் விதமாகவும், இலங்கை–துருக்கி உறவுகளை மேலும் வலுப்படுத்தும் முக்கிய தருணமாகவும் அமைந்தது.

Popular

More like this
Related

காஸாவில் போர் நிறுத்தம்: குனூத் அந் நாஸிலாவை நிறுத்திக் கொள்ளுமாறு ஜம்மியத்துல் உலமா வேண்டுகோள்

காஸாவில் போர் நிறுத்தம் தொடர்பாக இதுவரை ஒதப்பட்டு வந்த இன்று முதல்...

இரண்டு ஆண்டுகள் முடக்கத்தில் இருந்த பள்ளிவாசல்: சுத்தம் செய்யத் தொடங்கிய காசா மக்கள்

 யுத்த நிறுத்தத்தை தொடர்ந்து நிலைமைகள் சீராகத் தொடங்கியுள்ள நிலையில் மஸ்ஜித் ஸுஹதா...

முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்தார் ஞானசார தேரர்

பொதுபல சேனாவின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் உள்ளிட்ட...

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம்

நாட்டில் எலிக்காய்ச்சல் பரவுவதற்கு அதிக வாய்ப்புள்ள 12 மாவட்டங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக,...