தேசிய மக்கள் சக்தி எம்.பியாக பதவியேற்ற நிஷாந்த ஜயவீர!

Date:

தேசிய மக்கள் சக்தி தேசியப் பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினராக  யூ.டி. நிஷாந்த ஜயவீர சபாநாயகர் ஜகத் விக்ரமரத்ன முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.

ஹர்ஷன சூரியப்பெருமவின் இராஜினாமாவைத் தொடர்ந்து வெற்றிடமாக இருந்த நாடாளுமன்ற இடத்தை நிரப்ப ஜெயவீர எம்.பி.யாக பதவியேற்றார்.

தேசியப் பட்டியல் தேசிய மக்கள் கட்சி எம்.பி.யாக  நிஷாந்த ஜெயவீர தேர்ந்தெடுக்கப்பட்டதை உறுதிப்படுத்தும் வர்த்தமானி அறிவிப்பை இலங்கைத் தேர்தல் ஆணையம் நேற்று வெளியிட்டது.

நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சராக முன்னர் பணியாற்றிய டாக்டர் ஹர்ஷன சூரியப்பெரும, நிதி அமைச்சின் புதிய செயலாளராக கடமைகளை ஏற்றுக்கொள்வதற்காக தனது அமைச்சுப் பதவி மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் பதவி இரண்டிலிருந்தும் இராஜினாமா செய்தார்.

Popular

More like this
Related

உஸ்தாத் ஏ.ஸீ. அகார் முஹம்மத் எழுதிய ‘100 வாழ்க்கைப் பாடங்கள்’ நூல் வெளியீட்டு விழா இன்று மாலை BMICH இல்

தமிழ் உலகில் தனது பேச்சாலும் எழுத்துக்களாலும் மக்கள் மனம் கவர்ந்த மார்க்க...

தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சை: மேலதிக வகுப்புகளுக்கு நள்ளிரவு முதல் தடை!

2025 ஆம் ஆண்டுக்கான தரம் 5 புலமைப் பரிசில் பரீட்சையை கருத்திற்...

இலஞ்ச ஆணைக்குழுவினரால் சஷீந்திர ராஜபக்ஷ கைது

முன்னாள் விவசாய இராஜாங்க அமைச்சர் சஷீந்திர ராஜபக்ஷ, இலஞ்சம் அல்லது ஊழல்...

சில மாவட்டங்களில் அவ்வப்போது மழை பெய்யக் கூடிய சாத்தியம்

இன்றையதினம் (06) நாட்டின் மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மாகாணங்களிலும் காலி,...