நீதிமன்றில் சரணடைந்த நாமலுக்கு பிணை

Date:

நீதிமன்றத்தில் சரணடைந்த பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை பிணையில் செல்ல அம்பாந்தோட்டை மாவட்ட நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அம்பாந்தோட்டை சர்வதேச துறைமுகம் மற்றும் மத்தள சர்வதேச விமான நிலையத்தை தனியார்மயமாக்குவதற்கு எதிராக 2017ஆம் ஆண்டு அம்பாந்தோட்டை நகரில் இடம்பெற்ற போராட்டத்தின் போது, நீதிமன்ற உத்தரவை மீறி, பொது ஒழுங்கை மீறியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பான வழக்கில் ஆஜராகத் தவறியதற்காக பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு அம்பாந்தோட்டை பிரதம நீதவான் ஓஷத் மிகார நேற்று (28) பிடியாணை பிறப்பித்திருந்தார்.

இந்நிலையில் மாலைத்தீவுக்கான தனது விஜயத்தை முடித்துக்கொண்டு, நாடு திரும்பிய நாமல் ராஜபக்ஷ நகர்த்தல் மனுவொன்றின் ஊடாக நீதிமன்றில் முன்னிலையானதைத் தொடர்ந்து ஏற்கனவே அவருக்கு வழங்கப்பட்ட பிணையின் கீழ் அவரை விடுவிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

நாமல் ராஜபக்ஷ இன்று (29) முற்பகல் 11.30 மணியளவில் மாலைதீவின் மாலேயில் இருந்து ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானம் UL 102 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.

அம்பாந்தோட்டை நீதிமன்றம் பிறப்பித்த பிடியாணையின்படி, கட்டுநாயக்காவில் நாமல் ராஜபக்ஷவை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக வந்த தகவலின் அடிப்படையில், அவரது ஆதரவாளர்கள் குழு விமான நிலைய வளாகத்திற்கு வந்திருந்தனர்.

பின்னர் நாமல் ராஜபக்ஷ பி.ப. 12.30 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து விசேட விருந்தினர்களுக்கான வழி ஊடாக அவர் வௌியேறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...