ரஷ்யாவில் பதவி பறிக்கப்பட்ட விரக்தியில் துப்பாக்கியால் சுட்டு அமைச்சர் தற்கொலை

Date:

ரஷ்யாவில் ஜனாதிபதி விளாடிமிர் புட்டினால் பதவியிலிருந்து விலக்கப்பட்ட முன்னாள் அமைச்சர் தனக்கு பரிசாகக் கிடைத்த துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ரஷ்யா அரசாங்கத்தில் கடந்த ஓராண்டுக்கும் மேலாக போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் ரோமன் ஸ்டாரோவாய்ட்.

அவரை ஜனாதிபதி புட்டின் பதவியிலிருந்து நீக்கி திங்கள்கிழமை(ஜூலை 7) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

ரஷ்யாவில் உக்ரைன் நடத்திய வான் வழி ட்ரோன் தாக்குதல்களால் விமான சேவையில் ஏற்பட்ட குளறுபடிகளைத் தொடர்ந்து, அவரது அமைச்சர் பதவி பறிக்கப்பட்டது.

அவர் ஆளுநர் பதவி வகித்தபோது அரசு பணத்தை முறைகேடாக செலவழித்தாதகவும் குற்றச்சாட்டு உள்ளது. ரோமன் ஸ்டாரோவாய்ட்டை நீக்கிவிட்டு அப்பதவியில், அவருக்கடுத்த நிலையில் பொறுப்பு வகித்த ஆண்ட்ரே நிகிடின் நியமிக்கப்பட்டுள்ளார்.

எனினும், அமைச்சர் பதவி பறிக்கப்பட்டதற்கும் அவரது மரணத்துக்கும் சம்பந்தமில்லை என்று அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது.

Popular

More like this
Related

நிரந்தர சமாதானத்திற்கு மாவட்ட சர்வமத அமைப்புக்களின் பங்களிப்பு குறித்து விளக்கிய மாகாண மட்ட கலந்துரையாடல்!

இலங்கை தேசிய சமாதான பேரவை ஏற்பாடு செய்த நல்லிணக்கம் மற்றும் சமூக...

தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம்

நாட்டில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் எலிக்காய்ச்சல் பரவும் அபாயம் அதிகரித்துள்ளதாக...

ரியாதில் உலக சாதனை படைத்த இலங்கை சர்வதேச பாடசாலை மாணவர்களுக்கு இலங்கைத் தூதர் அமீர் அஜ்வத் வழங்கிய சிறப்பு கௌரவிப்பு

சவூதி அரேபியாவின் இலங்கைத் தூதரும் ரியாதிலுள்ள இலங்கை சர்வதேச பாடசாலையின் (SLISR)...

30 மணி நேரத்திற்குள் மழை மற்றும் காற்றுடனான காலநிலை அதிகரிக்க கூடும்!

தென்மேற்கு வங்காள விரிகுடாவில் நிலைகொண்டிருந்த குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி நேற்று...