மஹிந்தானந்த, நளின் பெர்னாண்டோ மீது மற்றுமொரு வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல்

Date:

சிறைத்தண்டனை அனுபவித்துவரும் முன்னாள் அமைச்சர்களான மஹிந்தானந்த அளுத்கமகே, நளின்  பெர்னாண்டோ மற்றும் முன்னாள் விளையாட்டுத்துறை அமைச்சின் செயலாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் நந்த மல்லவராச்சி ஆகியோருக்கு எதிராக இன்று (21) கொழும்பு மேல் நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த 2014 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் போது, ​​சதொச ஊடாக 14,000 கேரம் மற்றும் தாம் பலகைகளை கொள்வனவு செய்து அரசியல் ஆதாயம் பெறும் நோக்கில் விளையாட்டு சங்கங்களுக்கு விநியோகித்ததன் மூலம் பொது சொத்துச் சட்டத்தின் கீழ் குற்றம் செய்ததாக் கூறி இந்த குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.

குற்றப் பத்திரிகையைத் தொடர்ந்து, கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி மஞ்சுள திலகரத்ன மூன்று பிரதிவாதிகளையும் பிணையில் விடுவிக்க உத்தரவிட்டுள்ளார்.

எனினும், அவர்களுக்கு ஏற்கனவே உள்ள சிறைத்தண்டனைகள் காரணமாக, மஹிந்தானந்த அளுத்கமகே மற்றும் நளின் பெர்னாண்டோ ஆகியோரை அடுத்த திட்டமிடப்பட்ட விசாரணை நாளில் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டார்.

இந்நிலையில், குற்றம் சாட்டப்பட்டவர்கள் சார்பாக ஆஜரான வழக்கறிஞர், தற்போதைய வழக்கில் குற்றச்சாட்டுகளின் நிலைத்தன்மையை எதிர்த்து, ஆரம்ப ஆட்சேபனைகளை எழுப்ப திட்டமிட்டுள்ளதாக நீதிமன்றத்திற்குத் தெரிவித்தார்.

 

ஆரம்ப ஆட்சேபனைகளை பரிசீலிக்க செப்டம்பர் மாதம்  4 ஆம் திகதிக்கு வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

 

Popular

More like this
Related

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல் இராணுவம் தீவிரம்

காசாவின் மிகப் பெரிய நகரான காசா சிட்டியை முழுமையாகக் கைப்பற்ற இஸ்ரேல்...

இலங்கையில் நாளொன்றுக்கு 5 பேர் கிட்னி நோயினால் இறக்கின்றனர்: சுகாதார மேம்பாட்டுப் பணியகம்

நாட்டில் சிறுநீரக நோய்கள் காரணமாக ஆண்டுதோறும் சுமார் 1,600 பேர் உயிரிழக்கின்றனர்....

கொழும்பில் நாளை நீர் விநியோகம் துண்டிக்கப்படாது!

கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளில் நாளை (18) காலை 10.00 மணி...

இஸ்ரேலை ஐநாவிலிருந்து இடை நிறுத்துக: பலஸ்தீனுக்கு முழு உறுப்புரிமை வழங்குக-தேசிய ஆலோசனை சபை கோரிக்கை

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸுக்கு தேசிய சூறா...