ரி.பி. ஜாயா ஸஹிரா கல்லூரியில் வரலாற்றுச் சாதனை: 9A பெற்ற மாணவனுக்கு பாராட்டு நிகழ்வு

Date:

கொழும்பு ரி.பி. ஜாயா கொழும்பு ஸாஹிரா கல்லூரி வரலாற்றில் முதன்முறையாக, 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் (GCE O/L) சிங்கள மொழி மூலமாக 9 பாடங்களிலும் A சித்திகளைப் பெற்று எம்.ஐ. முஆத் அஹமட் என்ற மாணவன் சாதனை படைத்துள்ளார்.

மாணவனை கௌரவிக்கும் வகையில்  ஜூலை 18 வெள்ளிக்கிழமை, ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர் மாளிகாவத்தை மஸ்ஜிதுஸ் ஸலாம் ஜும்ஆ மஸ்ஜிதில் சிறப்புப் பாராட்டு நிகழ்வு நடைபெற்றது.

இந்த கெளரவிப்பு நிகழ்வில் பள்ளிவாசல் தலைவர் எம்.ஜே.எம்.சியாத், பள்ளிவாசல் பிரதம இமாம் அஷ்ஷெய்க் அல்ஹாபிழ் இம்ரான் மசூத், கொழும்பு மாநகர சபைத் உறுப்பினர் ஏ.எம்.ஜே.எம்.ஜெளபர், கொழும்பு மாவட்ட முஸ்லிம் விவாகப் பதிவாளர் பெளசுல் அலீம் பாரூக் அவர்களும் நினைவு பரிசுகளை வழங்கினர்.

மேலும் மாளிகாவத்தை மஸ்ஜித் சம்மேளனத்தின் செயலாளர் எம்.எஸ்.எம். இல்யாஸ், பேட்டை மஸ்ஜித் கூட்டமைப்பின் செயலாளர் ஏ.எச்.எம். நாசர், மஸ்ஜிதுஸ் ஸலாம் ஜும்மா பள்ளிவாசல் பிரதம இமாம் மௌலவி அல் ஹாஃபில் இமாறன் மஸ்ஹூத், செயலாளர் ஏ.எச்.எம். பைசர், உப தலைவர் இம்தியாஸ் நூர்தீன், உதவிச் செயலாளர் எம்.எச்.எம்.பைசல் உள்ளிட்ட பள்ளி நிர்வாகத்தினர், பிரதேசவாசிகள் என பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டனர்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...