ரி.பி. ஜாயா ஸஹிரா கல்லூரியில் வரலாற்றுச் சாதனை: 9A பெற்ற மாணவனுக்கு பாராட்டு நிகழ்வு

Date:

கொழும்பு ரி.பி. ஜாயா கொழும்பு ஸாஹிரா கல்லூரி வரலாற்றில் முதன்முறையாக, 2024 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையில் (GCE O/L) சிங்கள மொழி மூலமாக 9 பாடங்களிலும் A சித்திகளைப் பெற்று எம்.ஐ. முஆத் அஹமட் என்ற மாணவன் சாதனை படைத்துள்ளார்.

மாணவனை கௌரவிக்கும் வகையில்  ஜூலை 18 வெள்ளிக்கிழமை, ஜும்ஆ தொழுகைக்குப் பின்னர் மாளிகாவத்தை மஸ்ஜிதுஸ் ஸலாம் ஜும்ஆ மஸ்ஜிதில் சிறப்புப் பாராட்டு நிகழ்வு நடைபெற்றது.

இந்த கெளரவிப்பு நிகழ்வில் பள்ளிவாசல் தலைவர் எம்.ஜே.எம்.சியாத், பள்ளிவாசல் பிரதம இமாம் அஷ்ஷெய்க் அல்ஹாபிழ் இம்ரான் மசூத், கொழும்பு மாநகர சபைத் உறுப்பினர் ஏ.எம்.ஜே.எம்.ஜெளபர், கொழும்பு மாவட்ட முஸ்லிம் விவாகப் பதிவாளர் பெளசுல் அலீம் பாரூக் அவர்களும் நினைவு பரிசுகளை வழங்கினர்.

மேலும் மாளிகாவத்தை மஸ்ஜித் சம்மேளனத்தின் செயலாளர் எம்.எஸ்.எம். இல்யாஸ், பேட்டை மஸ்ஜித் கூட்டமைப்பின் செயலாளர் ஏ.எச்.எம். நாசர், மஸ்ஜிதுஸ் ஸலாம் ஜும்மா பள்ளிவாசல் பிரதம இமாம் மௌலவி அல் ஹாஃபில் இமாறன் மஸ்ஹூத், செயலாளர் ஏ.எச்.எம். பைசர், உப தலைவர் இம்தியாஸ் நூர்தீன், உதவிச் செயலாளர் எம்.எச்.எம்.பைசல் உள்ளிட்ட பள்ளி நிர்வாகத்தினர், பிரதேசவாசிகள் என பெரும் எண்ணிக்கையிலானவர்கள் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

நாட்டில் சில இடங்களில் ஓரளவு பலத்த மழை பெய்யலாம்

வடக்கு, கிழக்கு, வடமத்திய, மத்திய, சப்ரகமுவ மற்றும் ஊவா மாகாணங்களின் பல...

சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் ஹிஜாப் விவகாரம் தொடர்பில் ரிஷாத் பதியுதீன் அமைச்சருக்கு கடிதம்!

திருகோணமலையில்  சுகாதாரத் துறையில் பணிபுரியும் முஸ்லிம் பெண்களின் அரசியலமைப்பு உரிமைகளைப் பாதுகாக்க...

காலாவதியான பொருட்களை விற்பனைக்கு வைத்திருந்த முன்னணி பல்பொருள் அங்காடிக்கு அபராதம்

காலாவதியான உணவுப் பொருட்களை விற்பனை செய்ததாக குற்றத்தை ஒப்புக்கொண்டதால், முன்னணி பல்பொருள்...

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் கவனம் 

உள்ளூராட்சி நிறுவனங்களின் செயற்பாடுகளில் பிரஜைகளின் பங்களிப்பை விரிவுபடுத்துவது தொடர்பில் திறந்த பாராளுமன்ற...