44 வீத பெரும்பான்மை ஆசனம் வென்ற NPP தலைமை வேட்பாளர் 1 வாக்கினால் வெலிகம பிரதேச சபையில் தோல்வி: ஆட்சி SJB வசம்

Date:

45 ஆசனங்களைக் கொண்ட வெலிகம பிரதேச சபையின் 22 ஆசனங்களைப் பெற்றிருந்த தேசிய மக்கள் சக்தியால் ஆட்சி அமைக்க முடியாமல் போயுள்ளது.

வெலிகம பிரதேச சபைக்கான தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி 22 ஆசனங்களை வென்றிருந்தது.

ஐக்கிய மக்கள் சக்தி 9, ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன 6, ஐக்கிய தேசியக் கட்சி 2, சர்வஜன அதிகாரம் 2, மக்கள் கூட்டணி (PA ) 1, சுயேட்சை 3 ஆசனங்களை ப் பெற்றிருந்தன.

இந்த நிலையில் பிரதேச சபைத் தலைவரைத் தெரிவு செய்வதற்காக இன்று நடந்த வெளிப்படையான தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி (9) ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன (6), ஐக்கிய தேசியக் கட்சி (2), சர்வஜன அதிகாரம் (2), மக்கள் கூட்டணி (PA ) (1), சுயேட்சை (3) இணைந்து வழங்கிய 23 வாக்குகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் லசந்த விக்ரமசேகர வெலிகம பிரதேச சபையின் தவிசாளராகத் தெரிவானார்.

எதிர்க் கட்சி உறுப்பினர் தெனகம ராஹுல தேரோ பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டார்.

Popular

More like this
Related

நள்ளிரவு முதல் எரிபொருள் விலைகள் அதிகரிப்பு

இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனம் இன்று (21) நள்ளிரவு 12.00 மணி முதல்...

உலக நாடுகளின் எரிபொருள் விலையேற்றம்

அண்மையில் வெளியான உலக எரிபொருள் விலையேற்றத்திற்கமைய பல நாடுகளில் 20 வீதத்திற்கும்...

இலங்கைக்கான சவூதி அரேபியத் தூதுவரின் பெருநாள் வாழ்த்துச் செய்தி

புனித ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை முன்னிட்டு, இலங்கைக்கான சவூதி அரேபியத்...

ஜனாதிபதியின் ஈகைத் திருநாள் வாழ்த்துச் செய்தி!

உலகெங்கிலும் உள்ள முஸ்லிங்கள் ஒரு மாதம் முழுவதும் நோன்பு நோற்று, அதன்...