44 வீத பெரும்பான்மை ஆசனம் வென்ற NPP தலைமை வேட்பாளர் 1 வாக்கினால் வெலிகம பிரதேச சபையில் தோல்வி: ஆட்சி SJB வசம்

Date:

45 ஆசனங்களைக் கொண்ட வெலிகம பிரதேச சபையின் 22 ஆசனங்களைப் பெற்றிருந்த தேசிய மக்கள் சக்தியால் ஆட்சி அமைக்க முடியாமல் போயுள்ளது.

வெலிகம பிரதேச சபைக்கான தேர்தலில் ஆளும் தேசிய மக்கள் சக்தி 22 ஆசனங்களை வென்றிருந்தது.

ஐக்கிய மக்கள் சக்தி 9, ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன 6, ஐக்கிய தேசியக் கட்சி 2, சர்வஜன அதிகாரம் 2, மக்கள் கூட்டணி (PA ) 1, சுயேட்சை 3 ஆசனங்களை ப் பெற்றிருந்தன.

இந்த நிலையில் பிரதேச சபைத் தலைவரைத் தெரிவு செய்வதற்காக இன்று நடந்த வெளிப்படையான தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தி (9) ஸ்ரீ லங்கா பொது ஜன பெரமுன (6), ஐக்கிய தேசியக் கட்சி (2), சர்வஜன அதிகாரம் (2), மக்கள் கூட்டணி (PA ) (1), சுயேட்சை (3) இணைந்து வழங்கிய 23 வாக்குகளுடன் ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளர் லசந்த விக்ரமசேகர வெலிகம பிரதேச சபையின் தவிசாளராகத் தெரிவானார்.

எதிர்க் கட்சி உறுப்பினர் தெனகம ராஹுல தேரோ பிரதித் தலைவராக நியமிக்கப்பட்டார்.

Popular

More like this
Related

உயர்தர வகுப்புகளுக்கு நாளை நள்ளிரவு முதல் தடை!

கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை டிசம்பர் 10 ஆம் திகதி...

நாட்டின் சில பகுதிகளில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு மழை பெய்யக்கூடும்

சப்ரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் பிற்பகல் 2.00 மணிக்குப் பிறகு...

 CNCI தங்க மற்றும் உயர் சாதனையாளர் 2025  விருதுகளை வென்ற ஹலால் கவுன்சில்

கைத்தொழில் மற்றும் தொழில் முனைவோர் அபிவிருத்தி அமைச்சுடன் இணைந்து இலங்கை தேசியத்...

யாழ். செல்வா கலையரங்கில் நடைபெற்ற வடக்கு முஸ்லிம் இடம்பெயர்ந்தோர் கூட்டம்.

வடக்கில் இருந்து முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்ட 35ஆவது வருடத்தை நினைவுகூர்ந்து  31...