‘கல்குடா முஸ்லிம்களின் வாழ்வியலும் வரலாறும்’நூல் வெளியீட்டு விழா!

Date:

‘கல்குடா முஸ்லிம்களின் வாழ்வியலும் வரலாறும்’ நூல் வெளியீட்டு விழா எதிர்வரும் 10ஆம் திகதி வியாழக்கிழமை பி.ப. 04:00 மணிக்கு ஓட்டமாவடி தேசிய பாடசாலை புதிய கேட்போர் கூடத்தில் இடம்பெறவுள்ளது.

அஸ்ஷேக் எம்.டி.எம். ரிஸ்வி (மஜீதி) தலைமையில் இடம்பெறவுள்ள இந்நிகழ்வுக்கு பிரதம அதிதியாக பேராசிரியர் எம்.சி.ஏ நசார் ((PhD), MCPM, LLB Senior Lecturer, South Eastern University of Sri Lanka) பங்கேற்கவுள்ளார்.

நிகழ்வின் முதன்மை உரையை  பேராதனைப் பல்கலைக்கழகத்தின் ஓய்வு பெற்ற மூத்த விரிவுரையாளர் பேராசிரியர் எம்.எஸ்.எம். அனஸ் (PhD) அவர்களும் நூல் மதிப்புரையை  ஃபாத்திஹ் உயர் கல்வி நிறுவனத்தின் மூத்த விரிவுரையாளர்  ரவூஃப் ஜெயின்(PhD)அவர்களும்  நிகழ்த்தவுள்ளனர்.

இந்நூல், கல்குடா பிரதேச முஸ்லிம் சமுதாயத்தின் சமூக, கலாச்சார, வரலாற்று பின்புலத்தையும், அந்த சமூகத்தின் அழிவுகள், வாழ்வியல் மாற்றங்கள் மற்றும் அவர்கள் எதிர்கொண்ட சவால்கள் ஆகியவற்றையும் ஆழமாகப் பதிவு செய்யும் முக்கியமான விழாவாக இருக்கப்போகிறது.

அனைவரையும் இந்நிகழ்வில் கலந்துகொண்டு விழாவினை சிறப்பிக்குமாறு ஏற்பாட்டுக்குழுவினர் அழைப்பு விடுத்துள்ளனர்.

Popular

More like this
Related

உயர்தரப் பரீட்சை வினாத்தாள் கசிவு தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்த சிஐடி!

நடைபெற்று வரும் 2025 கல்விப் பொதுத் தராதரப் பரீட்சையின் பொருளியல் வினாத்தாள்...

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிப்பு.

இலங்கையின் மொத்த சனத்தொகையில் ஐந்தில் ஒரு பகுதியினர் மன அழுத்தத்தினால் பாதிக்கப்பட்டுள்ளதாக...

பாராளுமன்ற பெண் ஊழியருக்கு பாலியல் துஷ்பிரயோகம் இடம்பெறவில்லை: குழுவின் அறிக்கை கையளிப்பு

பாராளுமன்றத்தின் பெண் பணியாளர் ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டுள்ளாரா என்பது குறித்து...

இலங்கையின் ஏற்றுமதி 14 பில்லியன் டொலர்களை எட்டியது!

2025 ஆம் ஆண்டின் முதல் பத்து மாதங்களில் நாட்டின் மொத்த ஏற்றுமதிகள்...