அல்-அக்ஸா மசூதியில் ஆத்திரமூட்டும் வகையில் பிரார்த்தனையில் ஈடுபட்ட இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சர்: சவூதி அரேபியா, இஸ்லாமிய அமைப்புகள் கண்டனம்

Date:

இஸ்ரேலின் தேசியப் பாதுகாப்பு அமைச்சர் இடாமர் பென்-க்விர், ஜெருசலேமில் உள்ள அல்-அக்ஸா மசூதி வளாகத்திற்குச் சென்று அங்கு ஆத்திரமூட்டும் வகையில்  பிரார்த்தனையில் ஈடுபட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இது மத்திய கிழக்கின் மிகவும் உணர்திறன் வாய்ந்த இடத்தில், பல தசாப்தங்களாக நடைமுறையில் உள்ள ஒரு ஏற்பாட்டை மீறுவதாக பலஸ்தீன தரப்பு குற்றம் சுமத்தியுள்ளது.

இதேவேளை சவூதி அரேபியாவும் பல அரபு மற்றும் இஸ்லாமிய அமைப்புகளும் கடுமையாகக் கண்டித்துள்ளதுடன் இது ஒரு ‘ஆத்திரமூட்டும்’ செயல் என்றும், புனித தலத்தின் வரலாற்று மற்றும் சட்டப்பூர்வ நிலையை அப்பட்டமாக மீறுவதாகவும் இது கூறியுள்ளது.

சவூதி வெளியுறவு அமைச்சு வெளியிட்ட அறிக்கையில் இஸ்ரேலிய அதிகாரிகளின் இத்தகைய தொடர்ச்சியான மீறல்கள் பிராந்தியத்தில் பதற்றங்களைத் தூண்டும் என்று எச்சரித்துள்ளது.

ஜோர்டானின் வெளியுறவு அமைச்சகமும் இந்த சம்பவத்தை கண்டித்துள்ளதுடன் அல்-அக்ஸா மசூதியின் தற்போதைய நிலையை ‘கடுமையான மீறல்’ என்றும், சர்வதேச சட்டத்தை தெளிவாக மீறுவதாகவும் தெரிவித்துள்ளது.

அவரது வருகையின் புகைப்படங்கள் மற்றும் காணொளிகள், ஆக்கிரமிக்கப்பட்ட கிழக்கு ஜெருசலேமில் உள்ள யூதர்களால் டெம்பிள் மவுண்ட் என்று அழைக்கப்படும் வளாகத்தில் பென்-க்விர் யூதர் பிரார்த்தனைகளை வழிநடத்துவதைக் காட்டுகின்றன.

யூதர்கள் அந்த இடத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுகிறது. ஆனால் பிரார்த்தனை செய்ய முடியாது. இந்த நிலையில், இஸ்ரேலிய பிரதமர் அலுவலகம் இது தொடர்பில், ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.

அதில், அங்கு முஸ்லிம் வழிபாட்டை மட்டுமே அனுமதிக்கும் தற்போதைய ஒப்பந்தத்தைப் பராமரிக்கும் இஸ்ரேலின் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை என்று கூறியுள்ளது.

ஹமாஸ் இதனை, பலஸ்தீன மக்களுக்கு எதிராக நடந்து வரும் ஆக்கிரமிப்புகளை ஆழப்படுத்தும் செயல் என்று கூறியுள்ளது.

அதே நேரத்தில் பலஸ்தீன அதிகாரசபையின் தலைவர் மஹ்மூத் அப்பாஸின் பேச்சாளர், இஸ்ரேலிய அமைச்சரின் இந்த வருகை “அனைத்து சிவப்புக் கோடுகளையும் தாண்டிய செயல் என்று கூறியுள்ளார்.

Popular

More like this
Related

அல் குர்ஆன் மொழிபெயர்ப்பில் தீவிரவாதக் கருத்துக்கள் உள்ளடங்கியுள்ளதாம்; தடுமாறும் உலமாக்களின் மீள்பரிசீலனைக் குழு

 -அபூ அய்மன் மதம் சார்ந்த தவறான புரிதல் என்பது அறியாமையல்ல. அவை திட்டமிட்டவகையில்...

வெலிகம பிரதேச சபையின் வெற்றிடத்துக்கு சமீர தனுஷ்க டி சில்வா நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த சமீர தனுஷ்க டி சில்வா...

டெல்லி குண்டு வெடிப்பு: வெளிப்படையான, உயர் மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்- ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர் வேண்டுகோள்

செங்கோட்டை வெடிச் சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணை தேவை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்...

நம்பிக்கையை நசுக்கிய வரவு–செலவுத்திட்டம்: புத்தளம் மரிக்காரின் கவிதை வரிகள்!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வரவு–செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி ஒதுக்கியுள்ள நிதித்திட்டங்கள் குறித்து...