அல் குர்ஆன் மொழிபெயர்ப்பு வெளியிடப்படாதது ஏன்? குழுவின் பரிந்துரை என்ன? பாராளுமன்றில் மஸ்தான் கேள்வி: பதிலுக்கு இரண்டு வாரம் அவகாசம் கோரிய அமைச்சர்

Date:

கடந்த ஒரு வருடத்துக்கு மேலாக சுங்கப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள அல் குர்ஆன் மொழிபெயர்ப்புப் பிரதிகள் தொடர்பில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் இன்று பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினார்.

27 (02) இன் கீழ் கட்சித் தலைவர்களுக்கு வழங்கப்படும் அவகாசத்தில் இலங்கை தொழிற் கட்சியின் தலைவரான பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இந்த விடயத்தில் அரசாங்கம் தீவிர கவனம் செலுத்துவதாகவும், மொழி பெயர்ப்புப் பணிகளில் தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும், இன்னும் இரண்டு வாரங்களில் இந்தக் கேள்விகளுக்கான பதில் வழங்கப்படுமெனவும் தெரிவித்தார்.

பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் முன்வைத்த கேள்விகள்:

1. புனித அல் குர்ஆனை அறபு மொழியில் மீள் பிரசுரிக்கவும் ஏனைய மொழிகளில் மொழிபெயர்த்து பிரசுரிக்கும் உத்தியோகபூர்வமான உரிமை சவுதி அரேபியா அரசின் “மன்னர் ஃபஹத் அல்-குர்ஆன் பிரசுரிப்பு நிலையம்” கொண்டுள்ளதை உலகின் அனைத்து நாடுகளிலும் பரந்து வாழும் 200 கோடி முஸ்லிம் மக்கள் ஏகமனதாக ஏற்றுக்கொண்டுள்ளதுடன் உலகின் அனைத்து நாடுகளும் அங்கீகரித்துள்ளது.

உஸ்மானிய கிலாபத் தொடக்கம் ஆரம்பிக்கப்பட்ட இந்த புனிதப் பணிக்கான பதிப்புரிமையும், தனித்துவத்தன்மையும், புனிதத்துவமும் களங்கமின்றி இன்றுவரை பேணிக்காக்கப்பட்டு வருகிறது. ஆங்கிலம், பிரேன்சு, ஜோ்மனி, ரஷ்யா, சீனா, ஸ்பானிய, ஹிந்தி, உருது, சிங்களம், தமிழ், மலேயா, ஜப்பான், மலையாளம், கொரியா, நேபாளம் உள்ளிட்ட ஐம்பதிற்கும் அதிகமான மொழிகளில் இந்த இறை வேதம் மொழிபெயர்க்கப்பட்டு எவ்வித அடிக்குறிப்புக்களோ அல்லது தனிக்கைகளோ இன்றி மக்கள் கைகளை அடைந்துள்ளது.

2. இத்தப் பின்னணியில், இரு புனிதத் தலங்களின் பணிபாளர் சவுதி அரசின் அப்போதைய மன்னர் ஃபஹத் பின் அப்துல் அஸீஸ் அவர்களின் பணிப்புரையில் இஸ்லாமிய அறிவியல் ஆராய்ச்சி மற்றும் மார்க்கத் தீர்ப்புத் துறையின் பிரமத பிரச்சாரகர் அஷ்ஷேக் முஹம்மது இக்பால் மதனீ அவர்களின் தலைமையில் இந்த தமிழ் மொழிபெயர்ப்புப் பணி முன்னெடுக்கப்பட்டது. இந்த தமிழ் மொழிபெயர்ப்பை ஒப்பு நோக்கி சரிபார்க்கும் பணியில் இலங்கையைச் சோ்ந்த தலைசிறந்த உலமாக்களான, அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் (மறைந்த) பொதுச் செயலாளர் அஷ்ஷேக் முஹம்மது மக்தூம் அஹ்மது முபாரக் அவர்கள் உள்ளிட்ட, பேராசியர் அஷ்ஷேக் முஸ்தபா மௌலானா, அஷ்ஷேக் அபூபக்கர் அஸ்ஸித்தீக், கபூரிய்யா அரபுக் கல்லூரி விரிவுரையாளர் அஷ்ஷேக் நூருல் ஹம்ஸா முஹம்மது ஸயீது ஆகியோர் 1993 ஆம் ஆண்டு நியமிக்கப்பட்டமை எமது நாட்டுக்குக் கிடைத்த கௌரவமாகும்.

3. இந்த புனித அல் குர்ஆன் தமிழ் மொழிபெயர்ப்புப் பிரதிகள் இன்று இந்தியா, மலேசியா, சிங்கப்பூர், கனடா, அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள், மத்திய கிழக்கு மற்றும் ஏனைய ஆசிய நாடுகளில் எவ்வித தடைகளுமின்றி விநியோகிக்கப்பட்டுள்ளதுடன் தழில் வடிவில் பல்வேறு வளைத்தளங்களிலும் பதிவேற்றப்பட்டுள்ள நிலையில், 2024 மே மாதம் 16 ஆம் திகதி இலங்கை சுங்கத் திணைக்களத்தில் புனித அல்குர்ஆன் பிரதிகளைச் சுமந்த FSCU 8233306 இலக்க கொள்களன் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது.

இந்த கொள்களனில் இருந்த ஆவனங்களில் அறபு மற்றும் தழில் மொழிபெயர்ப்குப் பிரதிகளின் எண்ணிக்கை என்ன? அவற்றில் இதுவரை எத்தனை அல்-குர்ஆன் பிரதிகள் விடுவிக்கப்பட்டுள்ளன, எத்தனை பிரதிகள் விடுவிக்கப்படாமல் தடுத்துவைக்கப்பட்டுள்ளன? அதற்கான காரணம் என்ன?

4. முஸ்லிம் அலுவலக பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளரின் MRCA/R/09/NOL/2025 VI எனும் 2025.07.15 ஆம் திகதியிடப்பட்ட கடிதத்தின் படி, ஜனாதிபதி கௌரவ அநுர குமார திஸாநாயக்க தலைமையில் 2025 ஜுன் 23ஆம் திகதி நடைபெற்ற பாதுகாப்பு கவுன்ஸில் அமர்வில் தற்போது சுங்கத் திணைக்களத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்காக சவுதி அரசினால் அன்பளிப்புச் செய்த புனித அல்-குர்ஆன் தமிழ் பிரதிகள் சவுதி அரசின் மன்னர் ஃபஹத் அல்-குர்ஆன் பிரசுரிப்பு நிலையத்துக்கு மீண்டும் திருப்பியனுப்பப்பட்டு சரியான விளக்கத்துடனான அடிக்குறிப்புக்கள் இடப்பட்டு புனித அல்குர்ஆன் தமிழ் பிரதிகள் திருத்தப்படும் வரை அவற்றை விடுவிக்க முடியாது என தீர்மானிக்கப்பட்டதன் காரணங்கள் யாவை?

5. இலங்கையின் தலைசிறந்த உலமாக்கள் சரிபார்ந்து திருத்தி பிரசுரித்த புனித அல் குர்ஆன் பிரதியை மீள் பரிசீலனை செய்ய அல்லது இஸ்லாமிய வெளியீடுகளை மீள்பரிசீலனை செய்ய அரசாங்கத்தினால் ஒரு குழு நியமிக்கப்பட்டிருப்பின் அவர்களது பெயர் விபரம், உத்தியோகபூர்வமான நியமன வர்த்தமானி அறிவித்தல், மற்றும் கொடுப்பனவுகள் பற்றிய விபரத்தை இந்த சபையில் சமர்ப்பிக்கவும்?

6. புனித அல்குர்ஆன் தமிழ் பிரதி தொடர்பாக இந்தக் குழுவினால் முன்வைக்கப்பட்ட பரிந்துரைகள் யாவை? அவை தொடர்பாக இந்த அரசாங்கம் பூரணமாக உடன்படுகிறதா?

7. தடுத்து வைக்கப்பட்டுள்ள புனித அல் குர்ஆன் தமிழ் பிரதிகளை அவசரமாக விடுவிக்க உங்களது அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகள் என்ன? உள்ளிட்ட முக்கியமான கேள்விகளை முன்வைத்தார். இந்தக் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் ஹினிதும சுனில் செனெவி இரண்டு வாரம் அவகாசம் கோரினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

NPP அரசுக்கு சவாலாக மிலிந்த மொரகொட முயற்சியில் புதிய எதிர்க்கட்சிக் கூட்டணி. ஹக்கீம், ரிஷாதும் இணைவு

தேசிய மக்கள் கட்சி அரசாங்கத்துக்கு சவால் விடுக்கும் வகையில் ஒரு பரந்த...

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது!

முன்னாள் பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் பொலிஸ்மா அதிபர்...

சுகாதார அமைச்சில் விடுமுறை வழங்குவது இடைநிறுத்தம்

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு அதன் பணியாளர்களுக்கான விடுமுறை அனுமதிகளை...

தபால் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் சர்வதேச தபால் சேவைகள் தேக்கம்!

தபால் ஊழியர்களின் தொடர்ச்சியான வேலைநிறுத்தம் காரணமாக, பல்வேறு நாடுகளிலிருந்து இலங்கைக்கு அனுப்பப்பட்ட...