அதிவேக வீதிகளில் பயணிக்கும் வாகனங்களில் பின் இருக்கை பயணிகள் சீட் பெல்ட் அணிய வேண்டியது கட்டாயம்!

Date:

அதிவேக வீதியில் பயணிக்கும் வாகனங்களின் பின் இருக்கைகளில் பயணிப்பவர்களும் இன்று வெள்ளிக்கிழமை (1) முதல் சீட் பெல்ட் அணிவது கட்டாயமாக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இந்த திட்டம் தொடர்பாக இன்று முதல் சிறப்பு ஆய்வு நடத்தப்படும் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், அதிவேக வீதியில் பயணிக்கும் பேருந்துகளில் பயணிக்கும் அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிவதை வரும் செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் கட்டாயமாக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில்  விளக்கமளித்த தேசிய போக்குவரத்து ஆணையத்தின் தலைவர் பொறியியலாளர் பி.ஏ. சந்திரபால,

“செப்டம்பர் 1 ஆம் திகதி முதல் அதிவேக வீதியில் பயணிகளை ஏற்றிச் செல்லும் பஸ்களின் சாரதி உட்பட அனைத்து பயணிகளும் சீட் பெல்ட் அணிவதை கட்டாயமாக்கும் இலக்கை அடைய வேண்டிய அவசியம் உள்ளது.” என தெரிவித்தார்.

Popular

More like this
Related

2026ஆம் ஆண்டு வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று

2026 ஆம் ஆண்டு வரவு செலவு தொடர்பான இரண்டாம் வாசிப்பு மீதான...

மறுவாழ்வு நிலையங்களாக சிறைச்சாலைகள் மாற்றப்படும்:அமைச்சர் ஹர்ஷன

மறுவாழ்வு மற்றும் மீள் ஒருங்கிணைப்பு நிலையங்களாக சிறைச்சாலைகளை மாற்றுவதற்கு அரசாங்கம் விரிவான...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (08) நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர்...

மாணவர்களுக்கு வழங்கப்படும் பாதணி வவுச்சர்கள் தொடர்பில் வெளியான முக்கிய அறிவிப்பு

250க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட பாடசாலைகளுக்கு தற்போது வழங்கப்படும் பாதணி வவுச்சர்களுக்குப்...