பலஸ்தீனத்திற்கான உலக ஒற்றுமை பேரணி கொழும்பில்: ஆசிய நாடுகள் இணையும் மனிதாபிமானப் போராட்டம்!

Date:

கொழும்பில் ஆகஸ்ட் 15, 2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பொரல்லை கனத்தை சுற்றுவட்டத்திலிருந்து ஆரம்பித்து கெம்பல் பார்க் வாகன தரிப்பிடம் வரை
வரை மாபெரும்  பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடைபெறவுள்ளது.

பலஸ்தீன மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், நாட்டின் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த அரசியல் மற்றும் சிவில் சமூகக் குழுக்களால் இந்த பேரணி கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்ட பேரணி, பங்களாதேஷ், நேபாளம், மாலைதீவு , பாகிஸ்தான், இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய ஆறு ஆசிய நாடுகளில் ஒரே நேரத்தில் நடைபெறும் ஒருங்கிணைந்த பிராந்திய இயக்கத்தின் ஒரு பகுதியாகும்.

இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் மலேசியாவால் ஆதரிக்கப்படும் இந்த முயற்சி, மலேசியா தலைமையிலான உலகளாவிய ஒற்றுமை பிரச்சாரத்திற்கான உத்வேகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மலேசியாவின் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிமின் ஆதரவின் கீழ், காசா மீதான முற்றுகையை முறியடிக்க செப்டம்பர் தொடக்கத்தில் மத்தியதரைக் கடல் முழுவதும் 150 க்கும் மேற்பட்ட கப்பல்களை அனுப்புவதில் 45க்கும் மேற்பட்ட நாடுகளை ஒன்றிணைக்கவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Popular

More like this
Related

தாயைக் கொன்ற சவூதியர் உட்பட 8 பேருக்கு ஒரே நாளில் மரண தண்டனை!

சவூதி அரேபியாவில் ஒரே நாளில் எட்டு பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது....

தன்னைப் போலவே தன் சந்ததியையும் இலட்சியத்துக்காக உருவாக்க விரும்பிய ஊடகவியலாளர் அனஸ் அல்சரீப்!

இஸ்ரேலின் தாக்குதலில் உயிரிழந்த பாலஸ்தீன பத்திரிகையாளர் அனஸ் சரீபின் மனைவி, தங்கள்...

ஊடகக் குரல்களை அடக்குவது பாலஸ்தீன “இனப்படுகொலை” யின் யதார்த்தங்களை மறைக்கும் பரந்த முயற்சியின் ஒரு பகுதியாகும் – இலங்கை சுதந்திர ஊடக இயக்கம் கண்டனம்

காசா மோதலின் போது ஊடகவியலாளர்கள் கொல்லப்படுவதையும் பலஸ்தீனக் குரல்கள் அடக்கப்படுவதையும் இலங்கையின்...

இராணுவ புலனாய்வுப் பிரிவின் பணிப்பாளராக மேஜர் ஜெனரல் மஜீத் நியமனம்

இராணுவ புலனாய்வு படையணியின் புதிய கட்டளைத் தளபதியாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி...