பலஸ்தீனத்திற்கான உலக ஒற்றுமை பேரணி கொழும்பில்: ஆசிய நாடுகள் இணையும் மனிதாபிமானப் போராட்டம்!

Date:

கொழும்பில் ஆகஸ்ட் 15, 2025 வெள்ளிக்கிழமை பிற்பகல் 3 மணிக்கு பொரல்லை கனத்தை சுற்றுவட்டத்திலிருந்து ஆரம்பித்து கெம்பல் பார்க் வாகன தரிப்பிடம் வரை
வரை மாபெரும்  பலஸ்தீன ஆதரவு ஆர்ப்பாட்ட பேரணியொன்று நடைபெறவுள்ளது.

பலஸ்தீன மக்களுடன் ஒற்றுமையை வெளிப்படுத்தும் வகையில், நாட்டின் பல்வேறு சமூகங்களைச் சேர்ந்த அரசியல் மற்றும் சிவில் சமூகக் குழுக்களால் இந்த பேரணி கூட்டாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆர்ப்பாட்ட பேரணி, பங்களாதேஷ், நேபாளம், மாலைதீவு , பாகிஸ்தான், இலங்கை மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய ஆறு ஆசிய நாடுகளில் ஒரே நேரத்தில் நடைபெறும் ஒருங்கிணைந்த பிராந்திய இயக்கத்தின் ஒரு பகுதியாகும்.

இந்தோனேசியா, தாய்லாந்து மற்றும் மலேசியாவால் ஆதரிக்கப்படும் இந்த முயற்சி, மலேசியா தலைமையிலான உலகளாவிய ஒற்றுமை பிரச்சாரத்திற்கான உத்வேகத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.

மலேசியாவின் பிரதமர் டத்தோஸ்ரீ அன்வர் இப்ராஹிமின் ஆதரவின் கீழ், காசா மீதான முற்றுகையை முறியடிக்க செப்டம்பர் தொடக்கத்தில் மத்தியதரைக் கடல் முழுவதும் 150 க்கும் மேற்பட்ட கப்பல்களை அனுப்புவதில் 45க்கும் மேற்பட்ட நாடுகளை ஒன்றிணைக்கவுள்ளது.

Popular

More like this
Related

அல் குர்ஆன் மொழிபெயர்ப்பில் தீவிரவாதக் கருத்துக்கள் உள்ளடங்கியுள்ளதாம்; தடுமாறும் உலமாக்களின் மீள்பரிசீலனைக் குழு

 -அபூ அய்மன் மதம் சார்ந்த தவறான புரிதல் என்பது அறியாமையல்ல. அவை திட்டமிட்டவகையில்...

வெலிகம பிரதேச சபையின் வெற்றிடத்துக்கு சமீர தனுஷ்க டி சில்வா நியமனம்

ஐக்கிய மக்கள் சக்தி கட்சியைச் சேர்ந்த சமீர தனுஷ்க டி சில்வா...

டெல்லி குண்டு வெடிப்பு: வெளிப்படையான, உயர் மட்ட விசாரணை நடத்தப்பட வேண்டும்- ஜமாஅத்தே இஸ்லாமி ஹிந்த் அகில இந்தியத் தலைவர் வேண்டுகோள்

செங்கோட்டை வெடிச் சம்பவம் குறித்து வெளிப்படையான விசாரணை தேவை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவேண்டும்...

நம்பிக்கையை நசுக்கிய வரவு–செலவுத்திட்டம்: புத்தளம் மரிக்காரின் கவிதை வரிகள்!

2026 ஆம் ஆண்டுக்கான அரச வரவு–செலவுத்திட்டத்தில் ஜனாதிபதி ஒதுக்கியுள்ள நிதித்திட்டங்கள் குறித்து...