உலமா சபையின் புதிய நிர்வாகத்தின் கவனத்திற்கு: அஷ்ஷெய்க் எஸ்.எச்.எம். பளீலின் ஆலோசனைகள்

Date:

இலங்கையில் உள்ள முக்கிய இஸ்லாமிய அமைப்பாக விளங்கும் உலமா சபையின் புதிய நிர்வாகத்தெரிவு இடம்பெறுகிறது.

இந்நிலையில்,  ஜாமிஆ நளீமிய்யாவின் இஸ்லாமிய கற்கைகள் பீட பீடாதிபதி அஷ்ஷைக் S.H.M. பளீல் (நளீமி) அவர்கள் முன்வைத்துள்ள உலமா சபையின் புதிய நிறைவேற்றுக் குழுவிற்கான பொறுப்புக்கள்:

1. முஸ்லிம் விவாக – விவாகரத்து தொடர்பாக வருடக் கணக்கில் தீர்வு காணப்படாதிருக்கும் சர்ச்சைக்கு தீர்வாக ஒருமித்த ஆவணத்தை தயாரிப்பது

2. சுங்கத் திணைக்களத்தில் விடுவிக்கப்படாமலிருக்கும் அல்குர்ஆன் மொழிபெயர்ப்பு பிரதிகள் தொடர்பாக தீர்க்கமான முடிவுக்கு வருவது

3. சிலரால் எழுதப்பட்ட இஸ்லாமிய நூல்கள் உள்நாட்டுக்கு வரக்கூடாது என்று அரசாங்கத்தைக் கோரும் கடிதமொன்றை ஜம்இய்யாவில் அங்கம் வகிக்கும் சிலர் உட்பட எட்டுப் பேர் கையொப்பமிட்டு அரசாங்கத்துக்கு அனுப்பியிருக்கிறார்கள்.அது முஸ்லிம்களுக்கு மத்தியில் சர்ச்சையாக இருப்பதால் அது விடயமாக தீர்க்கமான முடிவுக்கு வருவது.

4. அரபு மத்ரஸாக்களுக்காகான ஒருமித்த பாட விதானம் ஒன்றுக்கான முன்மொழிவுகளை ஏற்கனவே நிபுணர்கள் குழுவொன்று முன்வைத்துள்ளது.அக்குழுவின் பணிகள் தொடரவில்லை.எனவே அதனை தொடர்வதற்கான முயற்சிகளைச் செய்வது.

இவை பணிவான வேண்டுகோள்கள். புதிய நிர்வாகம் தமது பணிகளை செவ்வனே செய்ய வேண்டும் என்று அல்லாஹுத்தஆலாவை பிரார்த்திக்கின்றோம்.

Popular

More like this
Related

பேருந்துகளில் பயணச் சீட்டு வழங்காவிட்டால் அறிவியுங்கள்: போக்குவரத்து அதிகார சபை

பயணச் சீட்டுக்களை பயணிகளுக்கு வழங்குவது தொடர்பில் நேற்றைய தினத்தில் 217 பேருந்துகள்...

உலக உணவு தினம்: உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் விவசாயத்தை ஊக்குவித்து வரும் சவூதி அரேபியா

எழுத்து : காலித் ஹமூத் அல்கஹ்தானி, இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் ஆண்டுதோரும்...

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பி.ப. 1.00 மணிக்கு பின் மழை

இன்றையதினம் (16) நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகல் 1.00 மணிக்குப் பிறகு...

இலங்கை வந்தடைந்த இஷாரா செவ்வந்தி உள்ளிட்ட 5 இலங்கையர்கள்

சஞ்சீவ குமார சமரரத்ன எனப்படும் கணேமுல்ல சஞ்சீவ கொலை வழக்கில் முக்கிய...