சமூகத்துக்கு கொடுக்க வேண்டிய மிக உன்னதமான செய்திகள் இக்கண்காட்சி மூலம் கொடுக்கப்பட்டுள்ளது; மௌலவியா ஜலீலா ஷஃபீக்!

Date:

மாவனல்லையில் இயங்கி வருகின்ற மகளிருக்கான உயர் கல்வி நிறுவனமான ஆயிஷா உயர் கல்வி நிறுவனம், ஆரம்பிக்கப்பட்டு 25 வருடங்கள் நிறைவடைவதை முன்னிட்டு நடைபெற்ற கண்காட்சியின் ஆரம்ப அங்குரார்ப்பண நிகழ்வுகள் ஆயிஷா கலாபீட முன்றலில் அண்மையில் நடைபெற்றது.

‘அருள் மிகு குடும்பம் இன்பம் நிறைந்த இல்லம்’ என்ற தொனிப் பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இக் கண்காட்சி 07-11 ஆம் திகதி வரை மிகவும் விறுவிறுப்பாக நடைபெறுகிறது. இன்று அதனுடைய இறுதிநாளாகும்.

சமூகத்தை விழிப்புணர்வூட்டும் வகையில் 8 பிரதான தலைப்புகளை கண்காட்சி உள்ளடக்கியுள்ளது. ஆயிஷா கல்லூரியின் வரலாறு மற்றும் தாய்மை விருத்தி, இஸ்லாமிய குடும்பத்தின் நோக் கங்கள், திருமண வாழ்க்கை, பெற்றோரியம், குழந்தைகளின் வளர்ச்சியும் விருத்தியும், நவீன குடும்ப சவால்கள், இஸ்லாமிய வீடு, இஸ்லாமிய இல்லம் என்பவையே அவையாகும்.

குடும்பம் தொடர்பான பல்வேறு விடயங்களை காட்சிப்படுத்தப்படுத்தக்கூடிய இக்கண்காட்சி மிகவும் வரவேற்பு பெற்ற கண்காட்சியாக அமைந்துள்ளது.

இக்கண்காட்சியில் கலந்துகொண்ட கள்எளிய முஸ்லிம் மகளிர் கல்லூரி மற்றும் ஆயிஷா சித்திகா கல்லூரியின் முன்னாள் அதிபருமான மௌலவியா திருமதி ஜலீலா ஷஃபீக் அவர்கள் கூறுகின்ற கருத்துக்கள்…

 

Popular

More like this
Related

தண்ணீரை சிக்கனமாகப் பயன்படுத்துமாறு கோரிக்கை!

நீர்ப்பாசனத் துறை இயக்குநர், நீர் மேலாண்மைப் பொறியாளர் எச்.எம்.பி.எஸ்.டி. ஹெரத், தனது...

HIV மற்றும் பாலியல் சார் நோய்களைக் கண்டறிய விசேட ‘நடமாடும் முகாம்கள்’!

எச்.ஐ.வி, கல்லீரல் அழற்சி (Hepatitis) மற்றும் பாலியல் சார் நோய்களை முன்கூட்டியே...

ஜூலை 13: கோட்டாபய ராஜபக்ஷ இலங்கையை விட்டு வெளியேறி நான்கு ஆண்டுகள் – ஒரு பார்வை

இலங்கையின் மிகவும் சக்திவாய்ந்த நிறைவேற்று ஜனாதிபதிகளில் ஒருவரான  கோட்டாபய ராஜபக்ஷவை 2022,...

முன்பள்ளி செல்லும் சிறுவர்களுக்கு பாதுகாப்பான ஆடைகளை அணிவிக்குமாறு வேண்டுகோள்!

டெங்கு அச்சுறுத்தல் நிலவும் சூழலில், டெங்கு நுளம்புகளிடமிருந்து பாதுகாப்பதற்காக, தங்கள் கைகளையும்...